Nammudaiya Thalam
Tuesday, October 8, 2013
கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்!
Thursday, September 26, 2013
பெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா? பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
ஒவ்வொரு துளியும் விஷம்!
திருவாளர் சோவின் துக்ளக் - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதிகாரமே தன் சுட்டு விரலில் வைத்திருப்பது போல ஆண வத்துடன் திமிர் முறித்து நடைபோடுகிறது!
பொங்கலன்று சென்னையில் அவர் பேசிய பேச்சும், உடல் நளினங்கள் (Body Language) அத்தன்மையில் எகிறி இருந்ததைப் பார்வையாளர்கள் உணர்ந்திருந்தனர்; - பலரும் இந்த வகையில் நம்மிடம் கருத்துத் தெரிவித்தனர். (அவருக்கே உரித்தான கோமாளித்தனத்துக்குப் பஞ்சமில்லை, மேடையில் சட்டையைக் கழற்றி விகடக் கச்சேரியும் நடத்தியுள்ளார்)
16.1.2013 நாளிட்ட ஒரே ஒரு துக்ளக் இதழை எடுத்துக் கொள்ளலாம்.
1. ஆளும் கட்சி எடுத்துள்ள முடிவின் பின்னணி - எனும் தலைப்பில் ஒரு கட்டுரை. நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியையும் சேர்ந்து அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, செல்வி ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆகப் போகிறாராம். போகட்டும் போகட்டும்.
எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது சரியில்லையாம். என்ன செய்ய வேண்டுமாம்?
கருத்துத்தானம் செய்கிறது துக்ளக். இடதுசாரிகள் மற்றும் சில சிறிய கட்சி களுக்கு அதிமுக அணியில் நிச்சயம் இடம் இருக்கும் என்றே பத்திரிகையாளர்கள் பலரும் இடது கட்சிகளைச் சேர்ந்தவர் களும் நினைக்கிறார்கள் - என்கிறது துக்ளக்
நேரிடையாகச் சொல்வது போல் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் இந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும் - அதற்காக யாரோ சிலர் நினைக்கிறார்கள் - என்பதை எவ்வளவு தளுக்காக தந்திரமாக சோ சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்.
இது திருவாளர் சோவின் பாணி. பிஜேபி அதிமுக பற்றி சில நேரங்களில் குறை சொல்வதுபோல எழுதும்போதுகூட, அக் கட்சி எப்படி நடந்து கொண்டால் நல்லது என்கிற உள்ளடக்கம் கொண்ட வாசகங் களும் இடம் பெற்றிருக்கும் - அவ்வளவு அக்கறை துள்ளிக் குதிக்கும்; ஆசாபாசம் அத்தகையது!
2. கேள்வி: கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா வீட்டிலிருந்து பணத்தை எண்ணும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி...?
பதில்: அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட மற்ற விஷயங்கள்தான் பெரும் மதிப்புடையனவே தவிர, இந்த மிஷின் விவகாரம் பெரிதல்ல. இது சாதாரணமாகக் கடைகளிலேயே கிடைக்கிற விஷயம். 2000, 3000 ரூபாய்க்கு இந்த மாதிரி மிஷின்கள் கிடைக்கின்றன. ஓரளவு சுமாராகப் பணத்தைக் கையாளும் நிலையில் இருப்பவர்கள்கூட, இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு பணத்தை எண்ணுகிறார்கள். ஆகையால், இது ஏதோ விபரீதமான விஷயம் என்பது போல நினைத்துக் கொண்டு, பணம் எண்ணுகிற மிஷன் கைப்பற்றப்பட்டது - என்பதை ஒரு பரபரப்புச் செய்தியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. - இப்படி ஒரு துக்ளக்கில் பதில்!
எப்படிப்பட்ட சாமர்த்தியமான பதில்! சம்பந்தப்பட்டவர் பிஜேபியைப் சேர்ந்தவர், - ஒரு மாநிலத்தின் துணை அமைச்சர் என்று வரும் பொழுது எவ்வளவு வக்கணையாக எழுதுகிறார்.
பணத்தை எண்ணும் அளவுக்கு மெஷின் வைத்திருந்தார் _ ஒரு துணை முதல் அமைச்சர் என்றால், அது சாதாரணமா? இந்த மெஷின் வீட்டுக்கு வீடு இருக்கிறது என்கிறார். (சோகூட வாங்கி வைத்துள்ளாரா என்று தெரியவில்லை)
அமைச்சராக இருக்கக் கூடியவருக்கு மாதச் சம்பளம் மட்டும் தானே இருக்க முடியும்; மெஷின் வைத்து எண்ணும் அளவுக்கு வருமானம் இருக்க முடியாதே - கூடாதே! _ படிப்பவர்களின் காதில் பூ சுற்றப் பார்க்கிறார். இந்தப் பார்ப்பனர்.
வருமான வரித்துறை - வேறு ஒரு கட்சிக்காரரின் வீட்டில் சோதனை செய்தபோது, பணம் எண்ணும் மெஷினைப் பறி முதல் செய்தால், இந்தக் கண்ணோட்டத்தோடு எழுதுவாரா சோ? சோவின் (வி)வாத முறை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!)
3. கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தமிழகத்தின் வாணிபம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் வளரும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ப. சிதம்பரம் முயற்சிக்க வேண்டும். அவரது பிறந்த நாள் பரிசாக இந்த வேலையை அவருக்கு நான் அளிக் கிறேன் - என்று கருணாநிதி பேசியுள் ளாரே..?
பதில்: சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாக எந்த நன்மையையும் தரப் போவதில்லை. அதை முடிப்பது தண்டச் செலவு. ஏற்கெனவே பணம் வீணாகியிருக்கிறது. இன்னமும் அங்கே கொண்டு போய் பணத்தைக் கொட்டினால், மேலும் பணம்தான் வீணாகுமே தவிர, அதனால் தமிழகத்திற்கு எந்தப் பெரிய நன்மையும் கிடைக்காது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்களால் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, ஒரு புராதனச் சின்னத்தை, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிற இடத்தை, வேண்டு மென்றே சிதைக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கமும் இதில் இருக்கிறது என்ற சந்தேகத்திற்கும் இந்தத் திட்டம் இட மளித்து விட்டது. இந்தக் காரணங் களினால் மத்திய அரசேகூட, இதை நிறை வேற்றுவதில் ஆர்வம் காட்டாமல்தான் இருக்கிறது.
ஆகையால், இதை மத்திய அரசு நிறை வேற்றும் என்ற நம்பிக்கையில், கலைஞர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பேசவில்லை. எதிர்காலத்தில் ஒரு வேளை காங்கி ரஸுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் போனால், அப்போது அதற்குச் சில காரணங்களைக் காட்ட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டலாம்; அது அவ் வளவாக எடுபடாது. ஏனென்றால், அதில் கலைஞரே பத்துப் பதினைந்து நிலைகளை எடுத்திருக்கிறார். அத்துடன்கூட சேது சமுத்திரத்தையும் ஒரு காரணமாகக் காட்டினால், தான் காங்கிரஸ் கூட்டணியைக் கை விட்டதற்குக் கொள்கைதான் காரணமே தவிர, குடும்பப் பிரச்சினை காரண மல்ல என்று வாதிடலாம் என்பதுதான் அவருடைய திட்டமாக இருக்கும். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார். (துக்ளக் 16.1.2013).
150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்படும் திட்டம் இது. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நலன்கள், வளங்கள் குறித்து ஏதோ கலைஞர் அவர்கள் கற்பனையாகச் சொல்வதுபோல் எழுதுவது திருவாளர் சோவின் வழக்க மான நரித்தன வார்த்தைகள்; பொருளாதார நிபுணர்கள், பல்வேறு ஆய்வுக்குழுக்கள் தான் அறிக்கைகளாகக் கொடுத்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 9 குழுக்கள் அதன்பின் இந்திய ஆட்சியில் மூன்று குழுக்கள், நிபுணர்களைக் கொண்ட 12 குழுக்கள் இந்தத் திட்டத்தின் அரு மையை - நலனை விரிவாக எடுத்துக் கூறி யுள்ளன.
1) மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு கப்பல்களின் பயண தூரம் 480 முதல் 840 கிலோ மீட்டர் குறையும்.
2) இலங்கையைச் சுற்றிச் செல்லாமல் கப்பல்கள் குறுக்கு வழியில் வருவதால் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கப்பல் பயண நேரம் குறையும். ஒரு மணி நேர கப்பல் பயணத்திற்கு ஆகும் செலவு தோராயமாக ரூ.50,000/-
3) சேது சமுத்திரத் திட்டத்தில் போடப் படும் முதலுக்கு இத்திட்டம் முடிந்த முதலாண்டில் நாலரை சதவிகித வருமானம் கிடைக்கும் 11ஆவது ஆண்டில் இந்த வருவாய் 7 சதவிகிதமாகவும், 15ஆவது ஆண்டில் இது எட்டரை சதவிகிதமாகவும் உயரும் 30 அடி ஆழ கால்வாய் 16ஆம் ஆண்டிலிருந்தும் 31 அடி ஆழ கால்வாய் 17ஆவது ஆண்டிலிருந்தும் 35 அடி ஆழ கால்வாய் 24 ஆவது ஆண்டிலிருந்தும் லாபத்தில் இயங்கும்.
4) மிகக் குறைந்த செலவில் சேது கால்வாயைப் பராமரிக்க முடியும். கால்வாய் துவக்கப்பட்ட ஆண்டில் ஆண்டிற்கு ரூ.13.80 கோடி வருமானமும், ரூ.4.30 கோடி ரூபாய் பராமரிப்பு செலவும் ஏற்படும்.
5) சேதுக் கால்வாயில் செல்லும் கப்பல் களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் அன்னியச் செலாவணி கிடைக்கும்.
6) இக்கால்வாய் வெட்டப்பட்டு பயனுக்கு வருமானால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சி அடையும்.
7) தூத்துக்குடி துறைமுகமும் சேதுக் கால்வாயும் சேர்ந்து இந்திய நாட்டிற்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்.
8) ஏற்றுமதி, இறக்குமதி பெருகும், வாணிபமும் வளரும். இப்பகுதியில் புதிய தொழில்கள் தோன்றும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
9) பயணிகள் - கப்பல்களுக்கும், வணிகக் கப்பல்களுக்கும் பாதுகாப்பான கால்வாயாக சேதுக் கால்வாய் விளங்கும்.
10) புயல் அபாயமுள்ள இலங்கைக் கடற்கரையைச் சுற்றிக் கொண்டு செல்வது கப்பல்களுக்கு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்.
11) சேதுக் கால்வாயின் இருபுறமும் உள்ள துறைமுகங்கள் இதன் மூலம் வளர்ச்சி அடையும் எண்ணூர். பாம்பன், வலிநோக்கம், குளச்சல், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புன்னைக் காயல், வேம்பார், திருக்கடையூர், புதுச்சேரி, சென்னை ஆகிய தமிழ் நாட்டுத் துறை முகங்கள் மிகுந்த வளர்ச்சியை அடையும்.
12) இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கையில் தமிழர் வாழும் ஈழப் பகுதியும் அனைத் துலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் பகுதிகளாக மாறும்.
13) நிலக்கரி, உப்பு, சிமெண்ட் போன்ற பெருமளவில் கொண்டு செல்லப்படும் பொருள்கள் கடல் மார்க்கமாக இக்கால் வாய் மூலம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வழியேற்படும். தற்போது ஆண்டு தோறும் கிழக்குக் கடற்கரையோரமாக 25 லட்சம் டன் நிலக்கரியும் 30 லட்சம் டன் உப்பும், 20 லட்சம் டன் பிற சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன.
14) இதன் மூலம் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் பொருளாதார ரீதியில் வளம் பெறும்.
15) கரையோர வர்த்தகம் பெருகி, 2000 முதல் 3000 டன் எடையுள்ள கப்பல்களின் போக்குவரத்து அதிகமாகும்.
16) மீன்பிடிக்கும் தோணிகள், கப்பல்கள் அதிக அளவில் தொழில் செய்ய பயன ளிக்கும்.
இவ்வளவு அருமையான திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்படுகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டிய நேரம் இது!
இப்படியெல்லாம் தெரிவித்திருப்பது நிச்சயமாக மானமிகு கலைஞர் அவர்களோ; மானமிகு கி.வீரமணி அவர்களோ அல்ல.
இந்த நிபுணர்களைவிட மே(ல்)தாவியா திருவாளர் சோ?
பாரதீய ஜனதாவைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறாரே திருவாளர் சோ, அந்த ஆட்சிக் காலத்தில்தானே இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான வரைபடம் உள்படத் தயாரித்துக் கொடுத்ததும் வாஜ்பேயி பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில்தானே?
அதிமுகவின் இரண்டு தேர்தல் அறிக் கையிலும் இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தவில்லையா - செல்வி ஜெயலலிதா?
அப்பொழுதெல்லாம் கனவில் வராத ராமபிரான் இப்பொழுதுதான் சோ கூட்டத் தின் முன் தோன்றி என்னைக் காப்பாற் றுங்கள், காப்பாற்றுங்கள்! என்று அப()யக் குரல் கொடுத்தாரா?
ஓர் அறிவியல் திட்டத்தில் புராணக் குப்பையைக் கொண்டு வந்து போட்டுக் குறுக்குச் சால் ஓட்டுபவர்கள், வேறு எந்தப் பிரச்சினையிலும்கூட கருத்துகள் கூறத் தகுதி படைத்தவர்கள்தானா என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் வினாவே!
4. கேள்வி: வெறும் இரண்டு, மூன்று மணி நேர மின்வெட்டிற்கே தி.மு.க.வை மக்கள் தோல்வியுறச் செய்தார்களே! தற்போது 18,19 மணி நேர மின்வெட்டு நிலவும் போது, அ.தி.மு.க.வை மக்கள் எப்படி தண் டிக்கப் போகிறார்களோ தெரியவில்லையே...? என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளாரே?
பதில்: ஒருவன் மற்றொருவனைக் கத்தியால் குத்தி விடுகிறான். அப்படி சீரியஸாகக் காயப்பட்ட மனிதன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான். ஆஸ்பத்திரியில் டாக்டர், அவனுக்கு ரண சிகிச்சை செய்கிறார். அதற்காக கத்தியை பல இடங்களில் அவர் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்பொழுது அந்த நபரைக் கத்தியால் குத்தியவன் அநியாயம், நான் ஒரு முறை குத்தியதற்கே என்னைக் கைது செய்து விட்டார்கள்; வழக்குப் போட்டிருக்கிறார்கள். நான் பெரிய குற்றம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அந்த டாக்டரோ பலமுறை கத்தியால் அவனைக் குத்துகிறார். குத்தி விட்டு ஊசி கொண்டு தையல் வேறு போடுகிறார். பிறகு மீண்டும் குத்துகிறார், அறுக்கிறார். என்னென்னவோ செய்கிறார். அதெல்லாம் பரவாயில்லை. நான் குத்தியதுதான் தவறா? இதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது ஸ்டாலினுடைய பேச்சு.
இப்படி ஒரு கேள்வி பதில் துக்ளக்கில் (16.1.2013 பக்கம் 31)
கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் உண்டா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு கிலோ இன்ன விலை என்று கூறுவதுதான் அக்ரகார அறிவாளி சோவின் பாணி.
நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை வெட்டி வீழ்த்திடுவேன் என்ற வீராப்புப்பற்றி சோவின் பேனா வாய் திறக்காதது ஏன்?
திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள் ளப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிக்காததற்குக் காரணம் என்ன?
மின்சாரத்தில்கூட திமுக மின்சாரம் என்று தரம் பிரித்து விட்டனரா?
ஆசை வெட்கம் அறியாது என்பார் கள்; அக்கிரகார அம்பிகளுக்கோ இனப் பற்று என்று வந்து விட்டால் கண் மண் தெரியாமல் அம்மணமாக ஓடக் கூடத் தயா ராக இருக்கக் கூடியவர்கள்தான் போலும்!
அறுவை சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர் சிலர் அறுவை சிகிச்சை செய் யும் கத்தியையே உள்ளே வைத்து விட்டு மேலே தையல் போட்டு விடுகிறார்களே _- அப்படிப்பட்டவர்களும் டாக்டர்கள் தானே! திருவாளர் சோ கூறும் டாக்டர் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவராக இருக் கிறாரே என்பதுதான் பிரச்சனையே! (சோவுக்குத் தான் எழுதத் தெரியுமா? இடக்கு முடக்காக மற்றவர்களாலும் எழுத முடியும் என்பதை முதலில் சோ அய்யர் உணரட்டும்!)
ஒரே ஒரு துக்ளக் இதழில் குடிநீரில் நஞ்சு கலப்பதுபோல தமிழர்களுக்கு எதிராக சோ கூட்டம் எழுத்துக்களைக் கொட்டித் தீர்க்கும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டாமா?
பாழாய்ப் போன அரசியலுக்காக பாஷாணத்தைப் பாயசம் என்று பருகலாமா? இந்த 2013லும் பார்ப்பனர்கள் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
துக்ளக்கில் சொட்டும் ஒவ்வொரு துளியும் ஆரியத்திற்கு ஆரிரரோ! திராவிடத்திற்கோ தீங்கானது என்பது நினைவிருக்கட்டும்! நினைவிருக்கட்டும்!!
நீஷப்பாஷை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதிட்டாராம். துக்ளக் குடுமிக்கு எரிச்சல் வியாதி வந்து விட்டது. இந்தத் தமிழ் உளறலுக்கு மருந்து தேவை என்று ஒரு துர்வாசர் கிளம்பி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது என்பது பஞ்சமா பாதகமா? ஏன் தாண்டிக் குதிக்கிறது துக்ளக்?
தமிழ் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! நீஷப்பாஷை என்று தானே அவாளின் பெரிய வாள் கருதுகிறார்.
தமிழ்நாட்டை விட்டுத் தள்ளுங்கள். வடமாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியில் வாதிடும் நிலை இருக்கத்தானே செய்கிறது - அதுபற்றியெல்லாம் எழுதுவதில்லையே -_ ஏன்?
இப்படி எழுதுகிற இந்தக் கூட்டத்துக்கு அவாளின் தாய் மொழியான சமஸ்கிருதத்தின்மீது பாசம் இல்லையா _ பற்று இல்லையா? ஏன் வெறி இல்லையா?
கோயில்களில் ஏன் சமஸ்கிருதம்? என்று கேட்டுப் பாருங்கள்.
தாண்டிதோண்டியில் குதிப்பார்கள். செத்த மொழிமீதே அவ்வளவு வெறி என்றால் உயிரோட்டம் உள்ள தமிழ்மீது தமிழர்கள்பற்றுக் கொள்ளக் கூடாதா? செத்துச் சுண்ணாம் பாகிப் போன சமஸ்கிருதத்துக்கு என்றே அவாள் ஆட்சிக் காலத்தில் ஓர் ஆண்டை அறிவித்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி இறைக்கவில்லையா?
******************************************
ஆங்கிலேயருக்குவக்காலத்தா?
வழக்கமாக ஒரு பல்லவியைப் ப டுவது பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)
எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா?
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?
தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!
அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!
இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!
நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).
ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!
பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
தமிழர்கள் - பழமையானவர்களா?
தமிழர்கள் - பழமையானவர்களா?
ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்
தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.
உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.
கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது.
பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பற்றுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பற்றுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது.
இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது.
சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்..
நன்றி முத்தமிழ் வேந்தன் (குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை)
மோடியின் பித்தலாட்டம்!
Sunday, December 30, 2012
அயோத்தி
My Sincere Thanks to
http://suransukumaran.blogspot.in/2012/12/blog-post_7825.html
அயோத்தி
1949 ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியில்
நடைபெற்ற ஒரு சம்பவம், அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் வன்முறையால் இதுவரை
ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் பொறுப்பேற்ற
ஐந்து பிரதம மந்திரிகளுக்கும் இந்த விவகாரம் தீராத தலைவலியை உண்டாக்கியது.
சராயு நதி, நேபாள நாட்டின் எல்லையோரம்
வழியாக வட இந்தியாவில் நுழைந்து கங்கையுடன் சங்கமித்து அயோத்தி நகரம்
வழியாக பாய்ந்து செல்கிறது. 1949ல் அயோத்தி நகரம் கோயில்கள், ஆசிரமங்கள்
மற்றும் மடங்கள் நிறைந்த ஒரு நகராக அறியப்படுகிறது. பண்டைக் காலம் முதல்
இந்நகரம், ராமரின் பிறந்த ஊராக கூறப்பட்டு வருகிறது. "அயோத்தி" என்பதற்கு
"எவராலும் வெல்ல முடியாத" என்று சமஸ்கிருதத்தில் பொருள் கொள்ளப்படுகிறது.
இந்நகரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வசித்து வந்தாலும், நெற்றியில்
பட்டை தீட்டிக்கொண்டு, நீண்ட தாடியுடனும், பெரிய அங்கியுடனும் சுற்றி
வரும் சாதுக்களால் இன்று இருப்பது போலவே அன்றும் நிறைந்து காணப்பட்டது.
1930ல் நாற்பது வயது மதிக்கத்தக்க
அபிராமதாஸ் என்கிற ஒரு சமயகுரு பீகாரில் இருந்து அயோத்திக்கு
வந்திருந்தார். இவர் தீவிரமான ராம பக்தராவார். அவருடைய சீடர்கள்
கூறுகையில், "ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வதே தனது வாழ்வின்
லட்சியம்" என்று சூளுரைத்து வந்ததாக தெரிவிக்கின்றனர். அவர் கூறிய இடத்தில்
சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் முகலாய சக்கரவர்த்தியான பாபரின் படைகள்
கட்டிய மசூதி ஒன்று இருந்து வந்தது. குரான் மற்றும் பெர்சிய மொழி
எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட செய்யுள் அடிகள் அதன் சுவர்கள் முழுவதும்
காணப்படுகின்றன.
மசூதி இருந்த இடம் ஒரு சுவரால் இரண்டாக
பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் ஒரு சிறிய மர மேடை அமைத்து அதன் மீது
ஒரு ராமர் சிலையை வைத்து இந்துக்கள் வழிபட்டு வந்தனர். திரு அபிராம
தாஸுக்கு ராமர் சிலையை அந்த மசூதிக்கு உள்ளேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும்
என்ற விபரித எண்ணம் தோன்றியது. அவரைப் போலவே பல சாதுக்களுக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.
அவர்கள், அங்கே பழங்காலத்தில் ஒரு இந்துக்
கோயில் இருந்ததாகவும், அதை தகர்த்துவிட்டு இந்த மசூதி எழுப்பப்பட்டு
உள்ளதாகவும் கூறி வந்தனர். இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகவே இரு பிரிவினருக்கும் அடிக்கடி வன்முறை
வெடித்து வந்துள்ளது.
அபிராம தாஸ் தன சீடர்களிடம், தன் கனவில் அடிக்கடி ராமபிரான் அந்த மசூதியின் மைய மண்டபத்தில் தோன்றி காட்சி தருவதாக கூறிவந்தார்
1949 ஆம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில்,
அவர் தான் கண்ட கனவை பாயிசாபாத் தின் நகர சட்டநடுவரான (மாஜிஸ்திரேட்) குரு
தத் சிங்கிடம் தெரிவித்தார். ஆச்சரியப்பட்டுபோன திரு சிங், "சகோதரரே,
எனக்கும் இந்தக் கனவு நெடு நாட்களுக்கு முன்பே தோன்றியது, இப்போது
உங்களுக்கு வந்துள்ளது" என்றார். பின்பு இருவரும் ராமரின் உருவச்சிலையை
அந்த இடத்தில் எவ்வாறு வைப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் இறங்கியதாக
திரு சிங்கின் மகனான திரு குரு பஸ்வந்த் சிங்க¤டம¢ தெரிவிக்கிறார்.
அதன் பிறகு ஏற்பட்ட சம்பவத்தை பல
இந்துக்கள் தெய்வச் செயல் என்றே நம்ப ஆரம்பித்தனர். ஆனால் திரு குரு
பஸ்வந்த் சிங் இதை மறுத்து, மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு காரியம்
நடந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
பிரிவினைக்கு முன்னால், அதாவது 1941 ஆம்
ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை, மொத்த
மக்கள் தொகையில் 24.4% ஆக இருந்துள்ளது. பிரிவினைக்கு பின்னர் ஒரு பத்து
வருடம் கழித்து அது 10% ஆக குறைந்துள்ளது.
பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு நேரு,
இந்தியாவை பல வகையில் சீர்படுத்தி, பல மதங்கள் ஒன்றாக, சகோதரத்துவத்துடன்
வாழவும், உலக அரங்கில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடாக அடையாளம் காணப்பட
பெரிதும் பாடுபட்டார். ஆனாலும் பல இந்துக்கள், பிரிவினை ஏற்பட்டு
பாகிஸ்தான் நாடு உண்டானதையும், "விருப்பப்பட்ட இஸ்லாமியர்கள் இங்கேயே
இருக்கலாம், அல்லது அங்கே செல்லலாம்" என்கிற வாய்ப்பை அவர்களுக்கு
வழங்கியதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே சிலர்,
இந்தியாவை இந்து சார்பு கொண்ட நாடாக மாற்ற ஆர்வம் கொண்டிருந்தனர்.
அனைத்திந்திய இந்து மகாசபை அமைவதற்கு இவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்
என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற
நாதுராம் கோட்சேயும் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் தான். 1949 ஆம் ஆண்டு அவன்
தூக்கிலிடப்பட்டான்.
பிரிவினைக்கு பிறகும் அயோத்தியில் பல
இஸ்லாமியர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். இஸ்லாமிய கலைத் தொழிலாளி உண்டாக்கிய
இந்துக் கடவுள் சிலைகளை இந்துக்கள் வணங்கி வந்தனர். இந்துக் கோயில்
குருக்கள், பூஜைக்கு துணிகளையும் மலர்களையும் இஸ்லாமியக்
கடைக்காரரிடமிருந்து வாங்கி வருகின்றனர். அயோத்தியில் உள்ள ஒரு இந்துக்
கோயிலுக்கு ஒரு இஸ்லாமிய மேலாளரும் உள்ளார் என்பதும் சுவாரஸ்யமான ஒரு
தகவல். அன்று, முகம்மது அசிம் அன்சாரி என்கிற 25 வயது தையல்காரர் "நாங்கள்
ஏன் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? நாங்கள் இந்த மண்ணை
சேர்ந்தவர்கள்" என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.
பாயிசாபாதின் சட்ட நடுவரான திரு குரு தத்
சிங், அலஹாபாத் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்றவராவார். சிவில் சர்வீஸ்
துறையில் சேர்ந்தாலும் சில விஷயங்களில் பிரிட்டிஷ் மேலதிகாரிகளிடம்
வேறுபட்டு நின்றார். இவர் தலைப்பாகை அணிந்து கொள்வார், அவர்களோ தொப்பி
அணிவதை விரும்புவர். நீங்கள் ஏன் தொப்பி அணியக் கூடாது? என்று அவர்கள்
கேட்டால், நீங்கள் ஏன் தலைப்பாகை அணியக் கூடாது? என்று எதிர் கேள்வி
கேட்பார் என்று அவர் மகன் கூறுகிறார்.
கலவரங்களை அடக்குவதில் பாகுபாடு
காட்டாமல், கண்டிப்புடன் செயல்பட்டார். சில சமயங்களில் இந்துக்களிடமே அவர்
"ஏதேனும் நீங்கள் வன்முறையோ குழப்பமோ விளைவித்தால், "உள்ளே லாக்கப்பில்
தள்ளிவிடவும் தயங்க மாட்டேன்" என்றும் கண்டிப்பு காட்டுவார்.
இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடும் போது , "நீங்கள் எல்லோரும் என்
சகோதரர்கள், நாம் எல்லோரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்" என்று அன்பொழுக
பேசுவார் என்றும் அவர் மகன் கூறுகிறார்.
பணியில் திறம்பட நேர்மையாக
பணியாற்றினாலும், சிறுபான்மையினரை குறிப்பாக இஸ்லாமியர்களை திருப்தி
படுத்தும் அரசாங்கத்தின் போக்கு அவருக்கு பெருத்த மன வேதனையை உண்டாக்கியது.
பாகிஸ்தான் என்கிற நாடு உதயமானதை அவர் விரும்பவில்லை என்றாலும்,
"உங்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்கப் பட்டதென்றால் , நீங்கள் அங்கு செல்வது
தான் முறை" என்கிற சிந்தனை அவரிடம் இருந்ததாக அவர் மகன் கூறுகிறார்.
திரு சிங் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த
பற்றுக் கொண்டிருந்தார். எந்த விதமான தீய பழக்கங்களும் அவரிடம் இல்லை.
கல்லூரிக் காலம் தொட்டு ராமபிரானை கடவுளாக வணங்கி வந்தார். ராமர் என்பவர்
விஷ்ணுவின் மறுவடிவம், விஷ்ணு காக்கும் கடவுளாகவும், பிரம்மா
படைப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் அறியப்படுவர்.
இந்து மத குறிப்புகளின் படி, ராமர்
அயோத்தியில் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் பிறந்தவர். அவர் தசரத
சக்கரவர்த்தியின் மூத்த மகனாவார். அவர் சூரிய வம்சத்து வழித் தோன்றலாக
அறியப்பட்டவராவார். ராமர் "மரியாதை புருஷோத்தமர்" என்கிற உயர்ந்த
பட்டத்தையும் பெற்றவராக திகழ்ந்தார். தன் மனைவியான சீதாவை இலங்கை அரக்கனான
ராவணனிடம் இருந்து போரிட்டு வென்று, அவளை மீட்டு அயோத்தி நகருக்கு
திரும்பினார் என்று சமஸ்கிருத ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர்
அயோத்தியின் அரசனாக திறம்பட ஆட்சி செய்தார் என்றும், இறுதிக் காலத்தில்
அயோத்தியில் ஒரு கதவு வழியாக சொர்கத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
திரு சிங்கிற்கு வயதான அதே வேளையில்,
ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யும் வைராக்கியமும் அதிகரித்தது.
இஸ்லாமியர்கள் பாபர் மசூதியை மனமுவந்து தங்களுக்கு தர வேண்டும் என்றும்
விரும்பினார். "நான் அவர்கள் மதத்தை மதிக்கும் போது, அவர்களும் அது போல
செய்யலாமே" என்று கூறுவார் என்று அவர் மகன் தெரிவித்துள்ளார்.
1940ம¢ ஆண¢டு மத்தியில், திரு சிங்,
இந்திய தேசிய சிவில் துறையில் பணிபுரியும் நிர்வாகச் செயலரான திரு
கே.கே.நாயரை சந்தித்து பேசினார். இந்தத் துறைதான் இன்றைய ஐ.ஏ.எஸ்.
துறைக்கு முன்னோடியாக விளங்கியது. திரு நாயர் கேரளத்தை சேர்ந்தவராவார்.
இந்த இருவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும் இருவரும்
இந்து மகாசபை கட்சியை ஆதரித்து வந்தனர். அவர்களின் அரசாங்க பதவியினால்,
இருவராலும் வெளிப்படையாக ஆதரித்து செயல்பட முடியவில்லை.
அவர்கள் இருவரும் தங்களை அயோத்திக்கு
மாற்றுமாறு, தங்கள் மேலிடத்திற்கு விண்ணப்பம் வைத்தனர். 1948 ஆம் ஆண்டு
திரு சிங், நகர சட்ட நடுவராக அங்கே பொறுபேற்றார். அதே வேளையில், திரு
நாயரும் மாவட்ட சட்ட நடுவராக பொறுபேற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்
இப்பொழுது உயிருடன் இல்லை. திரு நாயரின் மகனிடம் மேற்கொண்டு தகவல்களை பெற
முயன்றபோது, அவர் பேட்டி எதுவும் தர மறுத்துவிட்டார்.
திரு சிங், திரு நாயர், திரு அபிராம தாஸ்
மற்றும் பிற அதிகாரிகள் இரவு நேரத்தில் திரு சிங்கின் இல்லத்தில் கூடி
ராமர் சிலையை எவ்வாறு மசூதியினுள் பிரதிஷ்டை செய்வது என்பது பற்றி ரகசியமாக
விவாதித்தனர். அப்போது தனக்கு 15 வயது இருக்கும் என்றும், இந்த ஆலோசனைக்
கூட்டங்கள் நடைபெறும் போது, தான் அவர்களுக்கு நீரும், தேனீரும் அளிக்கச்
சென்றதாகவும், சில சமயங்களில் கதவருகே நின்று அவர்கள் என்ன பேசினார்கள்
என்று கேட்டதாகவும் திரு சிங்கின் மகன் தெரிவிக்கிறார்.
திரு குரு பஸ்வந்த¢ சிங்கின் கூற்றுக்களை
திரு மகாந்த் சத்யேந்திர தாஸ் உறுதிப்படுத்துகிறார். இவர் திரு அபிராம
தாஸின் சீடராக இருந்தவர் இப்பொழுது இவரை அரசாங்கம் தலைமைச் சமயகுருவாக
நியமித்துள்ளது. 1958 ஆம் ஆண்டு இவர் திரு அபிராம தாஸிடம் சேர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்:
மாவட்ட உயர் அதிகாரிகள், திரு
கே.கே.நாயர், மற்றும் திரு குரு தத் சிங் உட்பட திரு அபிராம தாஸுடன்
கூட்டுச் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, பூட்டிக் காவலில் இருக்கும் பாபர்
மசூதிக்குள் எவ்வாறு ராமர் சிலையை வைப்பது என்பது பற்றி விவாதித்தனர்.
ஒரு இந்துக் காவலாளி மதியம் மற்றும் மாலை
வேளைகளில் மசூதியில் காவல் பணியில் இருந்தார். ஒரு இஸ்லாமியக் காவலாளி
இரவு நேரக் காவல் பணியில் இருந்தார். திரு அபிராம தாஸையும் மற்றும் சில
சிறிய சாதுக்கள் கூட்டத்தையும் உள்ளே அனுமதிக்க இந்துக் காவலாளி ஒப்புக்
கொண்டார். இந்து மதத்திற்கு ஒரு மிகப் பெரிய புண்ணிய செயல் செய்து பயன்
பெறுவாய் என்று கூறி அவர் மனதைக் கரைத்தனர். இந்துக் காவலாளி பின்னர் நடு
இரவில் இஸ்லாமியக் காவலாளியிடம் மசூதியின் சாவிகளை ஒப்படைத்துச்
சென்றுவிடுவதாக திட்டம் ஏற்பாடானது. மறுபக்கம் இஸ்லாமியக் காவலாளியை திரு
குரு தத் சிங்கும், கே.கே.நாயரும் சந்தித்து அவர் என்ன செய்ய வேண்டும்
என்பதை விளக்கினர். அவர் சம்மதிக்க மறுத்தால், உயிருக்கே ஆபத்து நேரக்
கூடும் என்று மிரட்டப்பட்டதாக தெரிகிறது. அந்தக் காவலாளிகளும் அவருடைய
வழித் தோன்றல்களும் பற்றி பின்னர் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ராமரின் சிலை ஏழு அங்குல உயரமும் எட்டு
உலோகங்களாலும், உருவம் குழந்தை பருவ நிலையிலும் உருவாக்க தீர்மானிக்கப்
பட்டது. சம்பவம் நடந்த பிறகு, திரு நேருவும் அவருடைய அரசாங்கமும்
கோபப்பட்டு என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று திரு சிங்கும், நாயரும்
நன்கு உணர்ந்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்த வரும் உத்தரவை ஏற்பதைக்
காட்டிலும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதே மேல் என்றும்
தீர்மானித்திருந்தனர்.
நவம¢பர¢ 1949 ஆம் ஆண்டு இறுதியில்,
அயோத்தியில் பதட்டம் அதிகமாக நிலவியது. சாதுக்களும் ராம பக்தர்களும்
மசூதிக்கு வெளியே நெருப்பு மூட்டி யாகத்தை நடத்தினர். ராமரை அவர் பிறந்த
இடத்தில் திருப்பிக் கொண்டுவருவது பற்றியும் சொற்பொழிவு நடத்தினர். இதில்
அங்கிருந்த இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று தேதி
குறிக்கப்பட்டது. அன்று இரவு இஸ்லாமியக் காவலாளி காவல் பொறுப்பு ஏற்க வந்த
போது, இந்துக் காவலாளி அவரிடம் சாவிக் கொத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
அதிகாலை மூன்று மணி அளவில் (இந்து மதத்திற்கு அது அனுகூலமான உகந்த நேரமாக
கருதப்பட்டது) அபிராம தாஸும் அவருடன் வந்த சாதுக்களும் சிறிய மணிகளை
ஆட்டியபடி தங்கள் பணியைத் துவக்கினர். விளக்கேற்றிய பிறகு, அந்த சிறிய சிலை
மைய மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டு, "இரக்கம் நிறைந்த பரந்த
மனப்பான்மையுடைய கடவுள் தோன்றினார்"! என்று பாடினார்கள்.
அந்த இஸ்லாமியக் காவலாளி உள்ளூர்
அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை மூன்று மணி அளவில்
மசூதியின் மைய மண்டபப் பகுதியில் பெரிய ஒளி தோன்றியதாகவும், அங்கு சென்று
பார்த்த பொழுது அங்கு சிறிய ராமர் சிலை தானாக உதயமாகி ஒளி வீசிக்
கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த பிறகு, பதட்டத்தை தணிக்க
போலீசார் அங்கு வரவைக்கப்பட்டனர். சாதுக்கள் கூட்டத்தை கலைக்க, வானத்தை
நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில சாதுக்கள் மீது துப்பாக்கி சூடும்
நடத்தப்பட்டது. திரு சிங்கின் மகன் தன் தந்தையாரும் மற்றவர்களும் தீட்டிய
திட்டப்படி போலீஸாருக்கு வானில் சுடும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டதாக
தெரிவிக்கிறார்.
இரண்டு தகவல் தொடர்பாளர்கள் அயோத்திக்கும்
பைசாபாதிற்கும் இடையே மிதிவண்டியில் சென்று செய்தி சேகரித்து திரு குரு
தத் சிங்கிடம் தெரிவித்தனர். அவர் பிரத்யேகமாக நியமித்த ஒரு இந்துப்
பணியாளரிடம் தன் கைப்பட எழுதிய தகவல்களை கொடுத்து திரு நாயரிடம் சென்று
சேர்க்குமாறு பணித்திருந்தார். இவ்வாறு இருவரும் தகவல் பரிமாற்றத்தை
பெற்றனர் என்று கூறுகிறார் திரு குரு பஸ்வந்த சிங். மேலும் அவர், திரு
சிங், தனது இல்லத்தில் வழிபாட்டையும், பூஜையையும் நடத்தி முடித்தார்
என்றும், "அவர் என்ன வேண்டினார் என்று தெரியவில்லை, ஆனால் என் அனுமானப்படி
அவர், "எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும்" என்று கூறியிருப்பார் என்று
நம்புகிறேன்" என்கிறார்.
பிறகு திரு சிங், அயோத்தியில் மக்கள்
கூட்டம் கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் காவல்
துறையினருக்கு அவர் "இந்துக்களை தடுக்க வேண்டாம்" என்று மறைமுகமாக
உத்தரவிட்டார். அவர் தனது பாயிசாபாத் இல்லத்தை விட்டு, அதிகாரிகள் தங்கும்
அரசினர் விடுதிக்கு சென்றார். தன்னைப் பற்றி யார் விசாரித்தாலும் வெளியூர்
சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
அருகில் இருக்கும் ஊர்களுக்கு செய்தி
காட்டுத்தீ போல பரவியது. ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் சிலையை தரிசனம்
செய்ய அயோத்திக்கு படை எடுத்த வண்ணம் இருந்தனர். திரு அக்க்ஷய
பிரம்மச்சாரி, வயது 35 - (இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், மற்றும்
தீவிர ராம பக்தரும் கூட), "ராம பக்தர்கள் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம்,
"கடவுளை தரிசிக்க வாருங்கள் " என்று எல்லா இடங்களுக்கும் கூவியபடி
சென்றனர். உள்ளூர் அதிகாரிகளோ, திரு நாயரோ, ஒருவர் கூட சிலையை அகற்ற அல்லது
பதட்டத்தை தணிக்க ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. Thursday, December 13, 2012
டி. என். ஏ. Karpom Ariviyal
My Sincere Thanks to http://ta.wikipedia.org/s/m6
டி. என். ஏ.
டி.என்.ஏ என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது.புரதம், ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால் இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும்.
டி.என்.ஏ கட்டமைப்பு
இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. டி.என்.ஏ யானது நியூகிளியோடைட்டுக்கள் என அழைக்கப்படும் எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல்பகுதியக் கட்டமைப்பாகும். இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் ஜேம்ஸ் டி. வற்சன் (James D. Watson), ஃப்ரான்சிஸ் கிரிக் (Francis Crick) ஆகிய இருவருமாவர். ஒரு பொது அச்சைச் வட்டமாகச் சுற்றிச் செல்லும் இரு சுருளிச் சங்கிலி வடிவங்கள், 10 அங்க்ஸ்ரோம் (1.0 நானோ மீற்றர் nm) ஆரையையும், 34 அங்க்ஸ்ரோம் (3.4 nm) புரியிடைத் தூரத்தையும் கொண்டிருக்கும் அமைப்பொன்றை இவர்கள் கண்டு பிடித்தனர்.உயிரினங்களில் டி.என்.ஏ யானது பொதுவாக தனியான மூலக்கூறாக இல்லாமல், இரு மூலக்கூறுகள் இறுக்கமாக இணைந்த நிலையில் காணப்படும். இரு இழைகளும், ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதனால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்கள் (nucleotide) எசுத்தர் பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒற்றைச்சர்க்கரைகளையும், அவற்றுடன் இணைந்த தாங்கி (base) மூலக்கூறுகளையும், பொசுபேற் (Phosphate) கூட்டங்களையும் கொண்டிருக்கும். ஒற்றைச்சக்கரை மூலக்கூறுகள் ஒவ்வொன்றுடனும், அடினின் (Adenine - A), தயமின் (Thymine -T), சைற்றோசின் (Cytosine - C), குவானின் (Guanine - G) என்ற நான்கு தாங்கிகள் (bases) என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் ஏதாவது ஒன்று பிணைந்திருக்கும். ஒற்றைச்சக்கரை ஒன்றுடன் ஒரு தாங்கி மூலக்கூறு இணைந்து வரும் தொகுதி நியூக்கிளியோசைட்டு (nucleoside) எனப்படும். பின்னர் அது பொசுபேற்றுடன் இணையும்போது நியூக்கிளியோடைட்டு எனப்படுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்களில் காணப்படும் இந்த தாங்கி மூலக்கூறுகளின் ஒழுங்கு வரிசையே அனைத்து மரபியல்சார் தகவல்களையும் கொண்டிருக்கும் மரபுக் குறியீடுகளை நிர்ணயிக்கும். இந்த மரபுக் குறியீடுகள் புரதங்களின் எளிய கூறுகளான அமினோ அமிலங்களுக்கான வரிசையை தீர்மானிக்கும். இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும். (ஆர்.என்.ஏ யில் தயமினுக்குப் பதிலாக யூராசில் (uracil) எனப்படும் தாங்கி காணப்படும்)
டி.என்.ஏ யின் ஆதார இழையில் ஒற்றைச்சக்கரைகளும், பொசுபேற்றுக்களும் ஒன்றுவிட்டு ஒன்றான ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை, ஐந்து கரிம அலகுகளைக் கொண்ட 2-deoxyribose ஆகும் (ஆர்.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை ribose ஆகும்). அருகருகாக உள்ள இரு ஒற்றைச்சக்கரை வளைய மூலக்கூறுகளில் 3 ஆம், 5 ஆம் இடங்களிலுள்ள கரிமங்களுடன் ஒரு பொசுபேற் மூலக்கூறானது பொசுபேற்-இரு-எசுத்தர் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியான சமச்சீரற்ற பிணைப்புக்களால், ஒவ்வொரு இழையும் ஒரு திசையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ யில் ஒரு இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசைக்கு எதிர்த் திசையிலேயே அடுத்த இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசை அமையும். இதனால் இரு இழைகளும், ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருப்பதைக் காணலாம். இழைகளின் நுனிகளும் சமச்சீரற்ற நிலையிலேயே காணப்படும். ஒரு இழையின் ஒரு நுனியில், ஒற்றைச்சக்கரையின் 5 ஆம் கரிமத்துடன் இணைந்த பொசுபேற் அலகு காணப்படும். இதனை 5' (5 prime) என்பர். அதே பக்கமுள்ள அடுத்த இழையின் நுனியில் ஒற்றைச்சக்கரையின் 3 ஆம் கரிமத்தில் இணைந்த OH கூட்டம் (hydroxyl group) காணப்படும். இதனை 3' (3 prime) என்பர்.
டி.என்.ஏ யிலுள்ள புரியிடைத் தூரம் மிகச் சிறியதாக இருப்பினும், இது மில்லியன் எண்ணிக்கையிலான நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்ட பல்பகுதியமாகும். மனிதனில் உள்ள நிறப்புரிகளில் முதலாவது நிறப்புரி கிட்டத்தட்ட 220 மில்லியன் இணைதாங்கிகளைக் (base pairs) கொண்டது. டி.என்.ஏ இழைகளின் பகுதிகள் குறிப்பிட்ட வெவ்வேறு புரதங்களிற்கான தகவல்களை அல்லது கட்டளைகளைக் கொண்ட மரபணுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 நிறப்புரிகள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவில் இருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என்.ஏ இன் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது. டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்..
டி.என்.ஏ யின் அமைவிடங்கள்
மெய்கருவுயிரிகள்
விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், அதிநுண்ணுயிரிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளில் அதிகளவான டி.என்.ஏ க்கள் உயிரணுக் கருவிலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் இழைமணிகள், பச்சையவுருமணிகள் போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான நுண் உறுப்புக்களிலும் அமைந்திருக்கும். உயிரணுக்களில் நீளமான அமைப்பான நிறப்புரிகளில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் ஹிஸ்டோன் எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து நியூக்கிளியோசோம்களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சுருளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, குரோமற்றின் (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், டி.என்.ஏ இரட்டிப்பு எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும்.நிலைக்கருவிலிகள்
ஆனால் பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நிலைக்கருவிலிகளில், டி.என்.ஏ யானது குழியமுதலுருவில் (cytoplasm) காணப்படும்.டி.என்.ஏ யின் இயல்புகள்
பள்ளங்கள் (Grooves)
இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும். சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும். இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும். உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும்.இணைதாங்கிகள் (Base pairs)
இரு இழைகளிலுமுள்ள தாங்கி மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களால், இரு இழைகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இழையிலுள்ள குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறானது, அடுத்த இழையிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறுடன் மட்டுமே இணையும். அடினினானது அடுத்த இழையிலுள்ள தயமினுடனும், ஒரு இழையிலுள்ள சைற்றோசினானது, அடுத்த இழையிலுள்ள குவானினுடனும் மட்டுமே இணையும். இவ்வாறு இணையும் இரு தாங்கிகளையும் சேர்த்து இணைதாங்கி எனலாம். ஐதரசன் பிணைப்பானது பகிர்பிணைப்பு (அல்லது பங்கீட்டுப் பிணைப்பு அல்லது சம பிணைப்பாக = covalent bond) இருப்பதனால், அவை இலகுவில் பிரியவும் மீண்டும் சேரவும் கூடியனவாக இருக்கும். பொறியியல் விசை மூலமோ, அதிக வெப்பம் மூலமோ, இலகுவாக பல்லிணைவுப்படிகை போன்று இரு இழைகளும் பிரிக்கப்படலாம். இதன் மூலம், ஈரிழை டி.என்.ஏ யின் ஒவ்வொரு இழையிலும் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொரு இழையிலும் இந்த இயல்பானது டி.என்.ஏ இரட்டிப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இரட்டிக்கப்பட்டு புதிய நிரப்பு இழைகள் தோன்றும். இவ்வாறாக நிரப்பு இணைதாங்கிகளுக்கிடையே (complementary base pairs) நிகழும் மீள்தகு இடைவினையானது உயிரினங்களில் டி.என்.ஏ யின் தொழில்கள் அனைத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.பியூரீன், பிரிமிடீன் என்ற இரு வகையான தாங்கி மூலக்கூறுகளிலும் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. அடினின், தயமினுக்கு இடையில் இரு ஐதரசன் பிணைப்புக்களும், சைற்றோசின், குவானினுக்கு இடையில் மூன்று ஐதரசன் பிணைப்புக்களும் தோன்றும். மேலதிகமாக உள்ள ஒரு ஐதரசன் பிணைப்பின் விளைவால், GC அளவு அதிகமாகவுள்ள டி.என்.ஏ யானது, GC அளவு குறைவாக உள்ள டி.என்.ஏ யிலும்பார்க்க நிலைத்தன்மை கூடியதாக இருக்கும். GC அளவு அதிகமாக உள்ள, நீண்ட இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் உறுதியான பிணைப்புக்களையும், AT அளவு அதிகமுள்ள, குறுகிய இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் பலவீனமான பிணைப்புக்களையும் கொண்டிருக்கும்.
பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும்.
மேலான சுருளாக்கம் (Supercoiling)
டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது தளர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது நேர்மறையான மேலான சுருளாக்கம் (positive supercoiling) எனப்படும். சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது எதிர்மறையான மேலான சுருளாக்கம் (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் நொதியத்தின் தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும். டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும்.மாற்று டி.என்.ஏ வடிவங்கள்
தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உலோக அயனிகளின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும்.
Subscribe to:
Posts (Atom)