Tuesday, October 8, 2013

கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்!

My Sincere Thanks to : http://jeevanathigal.blogspot.com/2013/10/blog-post_7.html கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்! கருவறை... இந்தப்பெயர் இரண்டு இடங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒன்று அம்மாவின் வயிற்றில் கரு உருவாகி வளர்ந்து உயிராய் ஜனிக்கும் இடம்... மற்றொன்று கோயில்களில் கடவுள்கள் இருக்கும் இடம்... அதனால்தானோ என்னவோ ‘’தாயிற்ச்சிறந்த கோவிலும் இல்லை...’’ என்று பாடியிருப்பார்கள்போல...! அப்படிப்பட்ட தாய் உயிரின் வயிற்றிலிருக்கும் கரு உயிர்களை பார்க்கும சந்தர்ப்பம் தரும் அறிய புகைப்படங்கள்தான் இங்கு நாம் காணப்போவது. பெரும்பாலும் கருவுக்குள் இருக்கும் ஜீவராசிகளை பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் படங்கள் கிளியரான புகைப்படம் போல இல்லாமல் கருப்பு வெள்ளையில் மங்கலாகத்தான் இருக்கும். ஆனால் வளர்ந்து வரும் டெக்னாலஜியின் அடிப்படையில் நேஷனல் ஜியோகிராபிக் சேனலைச்சேர்ந்த ஒரு குழுவினர் பல்வேறு உயிர்களின் கருவறைத்தோற்றத்தையும் அழகான புகைப்படம் போல படம் பிடித்து இயற்கையின் அற்புதத்தை அழகூட்டிக் காட்டியிருக்கிறார்கள்... 4டி அல்ட்ரா ஸ்கேன் என்று சிலர் கூறும் இந்த முறையில் கருவுக்குள் இருக்கும் உயிரின் அற்புதத்தோற்றத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் + டின்னி கேமரா + கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலைகள் உபயோகித்து அசத்தியிருக்கிறார்கள். உலகத்தை பார்க்க வரவிருக்கும் இந்தப்புது உயிர்கள் சாந்தமான அல்லது கொடிய என்று எந்த ரகமாக இருந்தாலும் சரி... கருவில் அவைகளின் அழகு அளப்பரியதானதாக ரசிக்கும்படிதான் இருக்கிறது. டால்பின்... டால்பின்கள் என்றால் சும்மாவே கொள்ளை அழகுதான்... அதிலும் சிரித்தாற்போல் இருக்கும் அதன் சாந்தமான முகமும், அவை மனிதர்களிடம் நெருங்கிப்பழகும் விதமும் கூடுதல் ஈர்ப்பு. 4 அடி நீளம் முதல் 30அடி நீளம் வரையிலும், 40கிலோ எடை முதல் 10டன் எடை வரையிலும் கிட்டத்தட்ட 17 வகையான டால்பின்கள் இருக்கின்றன. டால்பின்கள் மனிதர்களைத் தாக்காது என்பது தவறான தகவல் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும் வெவ்வேறு வகையான தாக்குதல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். டால்பின்களின் சில தாக்குதல்கள் மனிதர்களின் மரணத்தில் கூட முடிந்திருப்பது அதிர்ச்சியான விஷயம்தான்... டால்பின்களின் கர்ப்பகாலம் அதன் வகையைப் பொருத்து 11 முதல் 18 மாதங்கள் வரை வேறுபாடு உடையது. கர்ப்பத்திலேயே சிரிக்கும் இந்த குட்டி டால்பினின் அழகை ரசிக்காமல் இருக்கமுடியுமா என்ன?... பெங்குயின்... பனிக்குளிரில் கூட்டமாக வாழும் இந்த ஜீவராசிகள் பறவை இனம்தான் என்றாலும் மனிதர்கள் போல நடக்கும் இதன் நடை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத அற்புத விஷயம்தான்... இதில் பெண் இனம் இடும் முட்டைகளை தன் கால்களுக்கு நடுவில் வைத்து 63 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொறிப்பது ஆண் பெங்குயின்தான் என்பது அதிசயக்க வைக்கும் தகவல்... முட்டைக்குள் உருவாகும் பெங்குயின்... யானை... சிறுவயது முதலே யானை என்றாலே ரசிக்காதவர் எவரும் இருக்கமுடியாது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டு பழக்கப்படுத்தப்படும் யானைகள் பலவித வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 13 அடி உயரம் வரையிலும், 7000கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய யானைகள் கூட்டமாக வாழும் குணம் கொண்டவை. யானைகளில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள்தான் முக்கியமான இரண்டு வகைகள். (பழங்காலத்தில் இருந்த பனி யானைகளான பிரம்மாண்ட மம்மூத்துகள் இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்) ஒரு யானை சராசரியாக 70 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது. யானைகள் தங்கள் தனித்துவமான அடையாளமான தும்பிக்கையால் 350 கிலோ எடை வரையிலும் தூக்கக்கூடியவை. யானை ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரமும் தூங்கக்கூடியதும், சராசரியாக 10 முதல் 20 கி.மீ வரை நடக்கக்கூடியது என்பதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்தான். யானைகள்தான் உயிரினங்களிலேயே நீண்ட கர்ப்பகாலம் கொண்டது. இதன் கர்ப்பகாலம் 24 மாதங்கள்... அதாவது கருத்தரிக்கும் நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு வாரிசை வயிற்றில் சுமக்கின்றன யானைகள். கர்ப்பம் உருவான முதல் சில மாதங்களுக்குள்ளாகவே குட்டிகள் முழுயானையின் மினியேச்சர் போன்றதொரு உருவம் பெற்று மீதியிருக்கும் பெரும்பான்மை மாதங்களில் வளரமட்டுமே செய்வது ஆச்சர்யமான விஷயம்... நாய்... மனிதனின் நம்பர் ஒன் பெட் அனிமல் என்று சொன்னால் அது நாய்தான். Pet என்ற வார்த்தையை கேட்டாலே பலபேருக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நாய்தான். இதற்கு மனிதனில் நண்பன் என்றொரு வழக்குப்பெயரும் உண்டு. மனித இனத்தால் பழக்கப்பட்ட விலங்கு எனும் வரலாற்றில் முதலிடம் நாய்க்குத்தான் கிடைத்திருக்கிறது. பரிணாம மாற்றக்கொள்கையின் அடிப்படையில் சாம்பல் நிற ஓநாய்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் / 33000 / 15000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து உருவான இனம்தான் நாய் என்று விதவிதமான அறிவியல் ஆய்வுகள் கூறுகிறது. நாய்கள் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளாக மாற்றப்பட்டது 13000 முதல் 37000 வருடங்களுக்கு முன்புதான் என்றும் விதவிதமான ஆய்வுகள் கூறியிருக்கிறது. கடந்த சில நூறாண்டுகளில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் நாய்களின் பல்வேறு வகை என்றாலும், நிலத்தில் வாழும் விலங்குகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது நாய்க்கு மட்டும்தான் என்பது கூடுதல் தகவல். பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டைப்பாதுகாத்தல், காவல் துறை மற்றும் ராணுவத்தில் உதவுதல், வேட்டைக்கு உதவுதல் என்று நாய்களின் உபயோகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். நாய் வகைகளிலேயே மிகவும் சிறியது Yorkshire Terrier. இதன் உயரம் வெறும் 2.5 இன்ச்சும், நீளம் 3.7 இன்ச்சும், எடை வெறும் 113கிராமும்தான் (ஒரு சிறிய செல்போனின் எடையளவு) இருக்கும். நாய்களில் உயரமான வகை என்றால் அது Great Dane. சராசரியாக 48இன்ச் வரையிலும் உயரம் வளரக்கூடியது இது. நாய் வகைகளிலேயே பெரியது என்றால் அது English Mastiff எனப்படும் வகை. இதன் எடை 155 கிலோ வரையிலும், வாலுடன் சேர்ந்த நீளம் 98 இன்ச் வரையிலும் வளரக்கூடியது. நாய்களின் கர்ப்பகாலம் 63 நாட்கள். குட்டிகளை ஈனும்போது குறையுடன் பிறக்கும் குட்டியையும், தேறாது எனத்தெரியும் குட்டியையும், தாய் நாயே பிரசவ கால மருந்து போல தின்று விடுவதும் உண்மைதான். 39நாள் கருவில்... 60 நாட்களுக்கு மேல் பிரசவத்திற்கு தயாராய்... ஓநாய் குட்டி கருவில்... சிறுத்தை... சிறுத்தை என்றதுமே பெரும்பாலும் நம் நினைவுக்கு வருவது மஞ்சளில் கரும் புள்ளிகளுடன் கூடிய அதன் நிறமும், அதன் வேகமான ஓட்டமும்தான்... இதுவும் பூனைகள் (Cat) இனத்தின் ஓர் அங்கம்தான் என்பது அறிவியல் கூற்று (புலி, பூனை, சிறுத்தை, லியோ பேர்டு, பிளாக் பேன்த்தர், ஜாக்குவார் போன்றவை எல்லாமே Cat Family என்பதன் கீழ்தான் வரையறுக்கப்பட்டிருக்கின்றன). யானைகளைப்போன்றே சிறுத்தைகளிலும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய என்ற இரண்டு வகை பூர்வீகம்தான் குறிப்பிடத்தக்கது. முதலில் ஆராய்ச்சிகளில் 7.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவைதான் ஆசிய சிறுத்தைகள் என்று அறிவித்திருந்தாலும், சமீபத்திய ஆராய்ச்சிகள் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சிறுத்தைகள் ஆசியாவில் இருந்ததாக கண்டறிந்திருக்கின்றன. சிறுத்தைகள் கூட்டமாக வாழாமல் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கமுடையவை. வேட்டையாடி உண்ணும் இனமான சிறுத்தை அதிகபட்சமாக மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகம் வரை ஓடக்கூடியது. நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே இதுதான் அதிக வேகத்தில் ஓடக்கூடியதாய் கண்டறியப்பட்டிருக்கிறது. இதை விட சுவாரசியமான தகவல் 0 to 100கி.மீ வேகத்தை சிறுத்தை வெறும் மூன்றே விநாடிகளில் எட்டிவிடுகிறது. சிறிய தலையையும் கூறிய பார்வையையும் உடைய சிறுத்தை மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்றாலும் அதனால் தொடர்ந்து நீண்ட தூரம் ஓடமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறுத்தை சராசரியாக 72கிலோ எடை வரையிலும், 93 இன்ச் நீளம் மற்றும் 37 இன்ச் உயரம் வரையிலும் வளரக்கூடியது. நகங்களும் கூறிய பற்களும்தான் சிறுத்தையின் முக்கிய ஆயுதங்கள். சிறுத்தையில் ராஜ சிறுத்தை என்று ஒரு ரகம் அதன் நிறத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்தியாவின் முகலாய அரசர்களில் ஒருவரான ஜகாங்கீர் நீலநிறப்புள்ளிகளுடன் கூடிய வெள்ளை சிறுத்தை வைத்திருந்ததாக உறுதி செய்யப்படாத வரலாற்றுத்தகவலும் உண்டு. சுவாசிக்கும் சத்தம்தான் கொஞ்சம் அதிகமானதாய் தெரியுமே தவிர புலியைப்போல சிறுத்தை உறுமாது என்பதும் கூடுதல் தகவல். சிறுத்தையின் கர்ப்பகாலம் 90 முதல் 98 நாட்கள். ஒரு பெண் சிறுத்தை ஒரே பிரசவத்தில் 150 முதல் 300கிராம் எடையில் 9 குட்டிகள் வரை பிரசவிக்கக் கூடியது. சிறுத்தைக்குட்டிகள் பிறக்கும் போதே தனது அடையாளமான கரும் புள்ளிகளுடன் பிறப்பது தனிச்சிறப்பு... பாம்பு... 145 முதல் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பான Cretaceous எனப்படும் காலத்தில் தோன்றிய உயிரினமான பாம்புகள், ஊர்வன இனத்தை சார்ந்தவை என்றாலும் அவை காலில்லா பல்லிகள் வகையிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன. பாம்புகளின் கண்களில் இமைகள் கிடையாது என்பதுவும், பாம்புகளுக்கு வெளிப்புற காதுகள் கிடையாது என்பதுவும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல். பாம்புகளின் தோற்றம் பற்றி இருவேறு ஆராய்ச்சி முடிவுகள் நிலவுகின்றன. Varanids எனப்படும் குடும்பத்தைச்சேர்ந்த பல்லி வகையிலிருந்து தோன்றியதாக ஒரு கருத்தும், Mosasaurs எனப்படும் நீர்வாழ் குடும்பத்தைச்சேர்ந்த உயிரினங்களிலிருந்து தோன்றியதாக ஒரு கருத்தும் இருக்கின்றன. உலகில் அண்டார்ட்டிக்காவைத்தவிர எல்லா கண்டங்களிலும் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றன. இதுவரையிலும் ஆராய்ச்சியாளர்களால் Leptotyphlops carlae எனப்படும் 4 இன்ச் நீளமுள்ள சிறிய பாம்புகளிலிருந்து 25 அடி நீளம் இருக்கும் Anaconda மற்றும் 30 அடி நீளமிருக்கும் Reticulated Python வரை 3400 வகை பாம்புகள் கண்டறியப்பட்டிருந்தாலும் இதன் எண்ணிக்கை நிச்சயம் இன்னமும் கூடலாம். பாம்புகளில் விஷமற்றது, விஷமுடையது, கொடிய விஷயமுடையது என்று பல வகைகள் இருந்தாலும் தற்காப்புக்காக இல்லாமல் பெரும்பாலும் இரையைத் தாக்கவே அந்த விஷம் பாம்புகளால் பயன்படுத்தப்படுகின்றன. பாம்புகள் அதன் வெளிநீட்டும் இரட்டை நாக்கு போன்ற உறுப்பின் மூலம்தான் வாசத்தைக்கண்டறியும். பாம்புகளின் கண்கள் தெளிவற்ற மங்கலான பார்வையை உடையதேத்தவிர பாம்புகளுக்கு கண்ணே தெரியாது என்பது கட்டுக்கதைதான். சில பாம்புகளுக்கு, அதிலும் குறிப்பாக ஆசியன் வைய்ன் சினேக் எனப்படும் Ahaetulla வகைப்பாம்புகளுக்கு பைனாகுலர் விஷன் எனப்படும் ஒரு குறிப்பிட்ட பொருளை ஃபோகஸ் செய்து பார்க்கும் திறன் இருப்பது ஆச்சர்யமான தகவல். Ahaetulla snake... சில வகைப்பாம்புகள் கண்பார்வை சரியில்லாதபோதும் infrared எனப்படும் முறையிலும், வைப்ரேஷன் மூலமும் கண்டறிந்து இரைகளைத் தாக்கிப்பிடிக்கும் திறமை உடையது. எல்லாப்பாம்புகளுமே தரையுடன் தொடக்கூடிய உடல் பகுதியில் அதிர்வலைகளை உணர்ந்து கொண்டு அருகில் வருவனவற்றைத்தெரிந்து கொள்ளுமளவுக்கு மிகவும் சென்சிட்டிவான தோல்அமைப்பை உடையவைதான். பாம்புகளுக்கு இரண்டு கிட்னிகள் இருந்தாலும் அவை மற்ற உயிரினங்களுக்கு இருப்பதுபோல பக்கவாட்டில் இல்லாமல் அதன் நீளமான உடலமைப்பு காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருப்பது இயற்கையின் படைப்பு. மேற்கத்திய நாடுகளில் Ball python மற்றும் Corn Snake ஆகிய இரு வகைப்பாம்புகளும் Petஆக வளர்க்கப்படுவதால் அதன் இனப்பெருக்கம்கூட மனிதர்களால் பல்வேறு வகைகளில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. Corn Snake... பாம்பின் விஷத்தால் உருவாகும் Cyto-Toxic எஃபெக்ட் மூலம் கேன்சர் நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் உள்ளதா என ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாம்புகளின் முட்டையிலிருந்து குஞ்சு பொறிப்பதற்கு அதன் வகையைப்பொருத்து வெவ்வேறு கால அளவுகள் உள்ளன. இந்தப்படத்தில் இருக்கும் கார்ன் சினேக்கின் முட்டை, குஞ்சு பொறிப்பதற்கு சராசரியாக 45 முதல் 65 நாட்கள் வரை ஆகுமாம். போஸ்ஸம்... எலி போன்ற தோற்றத்தில் அழகான நிறத்திலிருக்கும் இந்த போஸ்ஸமின் அட்டகாசங்கள் ஐஸ் ஏஜ் என்ற ஆங்கிலப்படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இதில் 103 வகைகள் உள்ளன. தனித்துமற்ற இதன் பயாலஜியும், உணவுமுறையும், எளிதான இனப்பெருக்க திறனும் இவைகளுக்கு எவ்வித இடத்திலும், எவ்வித கன்டிஷனிலும் வாழும் திறனை கொடுத்திருக்கின்றன. Acting Dead...! மரக்கிளைகளில் வாலை சுற்றிக்கொண்டு தலைகீழாக தொங்குவதும், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள செத்தது போல் நடிக்கும் இதன் தனித்திறனும் ரசிக்க வைக்கக்கூடியது. இந்த போஸ்ஸம்கள் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரை மட்டுமே உயிர்வாழக்கூடியன. பூச்சிகள், தவளை, பறவை, பாம்பு, மண்புழு போன்றவை இதன் முக்கிய உணவுகள் என்றாலும் இவை பழங்களில் ஆப்பிள் போன்றவற்றையும் விரும்பி உண்ணும். கரு உருவான நாளிலிருந்து 12 முதல் 14 நாட்களில் தாயின் வயிற்றை விட்டு குட்டிகள் வெளிவந்துவிடும். அப்படி வெளிவரும் குட்டிகள் தானாகவே நகர்ந்து தாயின் வெளிப்புறப்பையில் சென்று தங்கி வளரும். கிட்டத்தட்ட 70 முதல் 125 நாட்கள் வரை இப்படித்தாயின் வெளிப்புறப்பையில்தான் வளரும் இந்தக்குட்டிகள். ஒரே நேரத்தில் 13 குட்டிகள் வரை ஈன்று, அந்த பதிமூன்றையும் தனது வெளிப்புறப்பையில் வைத்து வளர்க்கும் திறன் கொண்டவை இந்தப் போஸ்ஸம்கள்... கங்காரு... கங்காரு என்றாலே நமக்கெல்லாம் உடனடியாக நினைவுக்கு வருவது ஆஸ்திரேலியாதான் என்றாலும் நான்கு முக்கிய வகையான கங்காருகளில் சிவப்பு கங்காரு எனும் வகை மட்டும் உலகம் முழுவதும் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறது. கங்காருகள் சராசரியாக மணிக்கு 20 முதல் 25 கி.மீ வேகம் வரையிலும் ஓடக்கூடியது என்றாலும், குறைந்த தூரமென்றால் மணிக்கு 70கி.மீ வேகம் வரையிலும் கூட ஓடுமாம். கங்காரு என்ற பெயர் வந்ததன் காரணம் நம்மில் பலர் அறியாத சுவாரசியத் தகவல். கங்காரு என்ற பெயர் முதன் முதலில் சர் ஜோசப் பேங்க்ஸ் என்பவரால் அவரது டயரியில் 1770ம் ஆண்டு ஜீலை 7ம் நாள் எழுதப்பட்டிருக்கிறது. ஹெச்.எம்.எஸ் என்டீவர் என்ற கப்பல் 7 வாரத்திற்கும் மேலாக பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கரையோரத்தில் அதன் கேப்டன் ஜேம்ஸ் குக்கும், சர் ஜோசப் பேங்க்சும் லோக்கல் விசிட்டில் பார்த்த கங்காருவை, அந்த விலங்கின் பெயர் என்ன என்று அங்கிருந்த Guugu Yimithirr இன மக்களிடம் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்கள். இவர்களின் பாஷை புரியாத அந்த இன மக்கள் ‘’I don’t understand you’’ என்பதை குறிக்கும் அவர்கள் மொழிச்சொல்லான ‘’கங்காரு’’ என்பதை கூறியிருக்கிறார்கள். அதை அந்த விலங்கின் பெயராக நினைத்துக்கொண்டு இந்த இருவரும் அதையே வரலாற்றில் நிலை நிறுத்தியிருப்பது சுவாரசியமான தகவல். கங்காருகளும் ஆடு மற்றும் மாடு போன்றே உணவை ஒரு முறை தின்றதும் பின் இரண்டாம் முறை அதே உணவை சாவகாசமாக அசை போட்டு செரிக்க வைக்கும் ரகமாம். ஆனால் மாடுகளின் சாணத்தில் உருவாவது போல கங்காருகளின் சாணத்தில் மீத்தேன் வாயு உருவாகாத வகையில் அதன் செரிமாணம் அமைந்திருப்பதால் அதே முறையை மாடுகளிலும் முயற்சி செய்து மீத்தேன் வாயுவின் கிரீன் ஹவுஸ் கேஸ் விளைவை குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். கங்காரு கிக்பாக்ஸிங்...! கங்காருக்களில் ஆண், பெண் இரு வகைகளுமே சண்டையிட்டுக்கொண்டாலும், அந்தரத்தில் பறந்து பின்னங்கால்களை தூக்கி எதிரியின் நெஞ்சில் தாக்கும் ஆண் கங்காருகளின் கிக் பாக்ஸிங் சண்டை மிகப்பிரபலம். கங்காருகளும் போஸ்ஸம் போலவே குட்டிகளை ஈன்றதும் வயிற்றிலிருக்கும் வெளிப்புறப்பையில் வளர்க்கக் கூடியவை. கர்ப்பத்தில் உருவாகும் கரு 31 முதல் 36 நாட்களில் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும்போது சிறிய சுண்டுவிரல் அளவில் வளர்ச்சியடையாத சதைப்பிண்டம் போலத்தான் இருக்கும். வெளியே வந்ததும் தாயின் வயிற்றிலிருக்கும் வெளிப்புறப்பையில் நுழைந்து தங்கி கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு அங்கேயே தாயிடம் பால் குடித்து வளர்கின்றன. அதன் பிறகு பையை விட்டு வெளியேறினாலும் கிட்டத்தட்ட 18வது மாதம் வரையிலும் தாய் கங்காரு குட்டிக்கு அவ்வப்போது பாலூட்டுவதும் கூடுதல் தகவல்... லெமன் சுறா... உடலின் நிறத்தால் லெமன் சுறா என்று பெயர் பெற்ற இந்த சுறா மீன் சராசரியாக 3 மீட்டர் நீளமும் 90கிலோ எடையும் வளரக்கூடியவை என்றாலும் இதுவரையிலும் கண்டறியப்பட்டதில் அதிகமான நீளமானதாக 4 மீட்டரும், அதிகமான எடையில் 183 கிலோவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டிராபிகல் மற்றும் சப்-டிராபிகல் தண்ணீரில் மாடரேட் ஆழத்தில் வசிக்கும் இந்தச்சுறாமீன்கள் பெரும்பாலும் ரெமோராஸ் எனப்படும் உறிஞ்சும் மீன்கள் புடைசூழ வசிக்கின்றன. சுறாக்களில் 70% குட்டியை ஈனும் வகையும், 30% முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வகைகளும் உள்ளன. இதில் இந்த லெமன் சுறா குட்டியை ஈனும் வகையைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லெமன் சுறா குட்டி பிறக்கும்போது... பிறந்தவுடனே தனியாக வாழும் திறன் கொண்ட ஒன்றரை முதல் இரண்டு அடி நீளமிருக்கும் சுறா குட்டிகள் அதன் வகையைப்பொறுத்து கர்ப்பத்தில் இருக்கும் காலம் 6 முதல் 22 மாதங்கள் வரை வேறுபடுமாம். லெமன் சுறா - தாயின் வயிற்றில்... மனிதன்... எப்போதுமே இந்த உலகில் மிகவும் அபாயகரமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது மனிதன்தான் என்று சில கருத்துக்கள் உண்டு. நாமெல்லோருமே அந்த இனம்தான் என்பதால் இதைப்பற்றி தனியாக விளக்கிக்கூற எதுவுமில்லை. மனித இனத்தின் கர்ப்பகாலம் 38 வாரங்கள் அதாவது 9 மாதங்கள்... கரு உருவாகும் முதல் சில வாரத்திலிருந்து அதன் படிப்படியான வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதை இந்தக்கருவறை அற்புதத்தோற்றங்களில் கண்டு மகிழுங்கள்... இந்தப்பதிவு நீங்கள் அறியாத சில தகவல்களையும், பார்க்காத சில அற்புதப்படங்களையும் உங்களுக்கு நிச்சயம் தந்திருக்கும் என்று நம்புகிறேன்... மற்றொரு அபூர்வத்துடன் வெகு விரைவிலேயே மீண்டும் சந்திப்போம்...

Thursday, September 26, 2013


பெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா? பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!

ஒவ்வொரு துளியும் விஷம்!



திருவாளர் சோவின் துக்ளக் - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதிகாரமே தன் சுட்டு விரலில் வைத்திருப்பது போல ஆண வத்துடன் திமிர் முறித்து நடைபோடுகிறது!

பொங்கலன்று சென்னையில் அவர் பேசிய பேச்சும், உடல் நளினங்கள் (Body Language) அத்தன்மையில் எகிறி இருந்ததைப் பார்வையாளர்கள் உணர்ந்திருந்தனர்; - பலரும் இந்த வகையில் நம்மிடம் கருத்துத் தெரிவித்தனர். (அவருக்கே உரித்தான கோமாளித்தனத்துக்குப் பஞ்சமில்லை, மேடையில் சட்டையைக் கழற்றி விகடக் கச்சேரியும் நடத்தியுள்ளார்)

16.1.2013 நாளிட்ட ஒரே ஒரு துக்ளக் இதழை எடுத்துக் கொள்ளலாம்.

1. ஆளும் கட்சி எடுத்துள்ள முடிவின் பின்னணி - எனும் தலைப்பில் ஒரு கட்டுரை. நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியையும் சேர்ந்து அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, செல்வி ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆகப்   போகிறாராம்.  போகட்டும் போகட்டும்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது சரியில்லையாம். என்ன செய்ய வேண்டுமாம்?

கருத்துத்தானம் செய்கிறது துக்ளக். இடதுசாரிகள் மற்றும் சில சிறிய கட்சி களுக்கு அதிமுக அணியில் நிச்சயம் இடம் இருக்கும் என்றே பத்திரிகையாளர்கள் பலரும் இடது கட்சிகளைச் சேர்ந்தவர் களும் நினைக்கிறார்கள் - என்கிறது துக்ளக்

நேரிடையாகச் சொல்வது போல் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் இந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும் - அதற்காக யாரோ சிலர் நினைக்கிறார்கள் - என்பதை எவ்வளவு தளுக்காக தந்திரமாக சோ சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்.

இது திருவாளர் சோவின் பாணி. பிஜேபி அதிமுக பற்றி சில நேரங்களில் குறை சொல்வதுபோல எழுதும்போதுகூட, அக் கட்சி எப்படி நடந்து கொண்டால் நல்லது என்கிற உள்ளடக்கம் கொண்ட வாசகங் களும் இடம் பெற்றிருக்கும் - அவ்வளவு அக்கறை துள்ளிக் குதிக்கும்; ஆசாபாசம் அத்தகையது!

2. கேள்வி: கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா வீட்டிலிருந்து பணத்தை எண்ணும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி...?

பதில்: அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட மற்ற  விஷயங்கள்தான் பெரும் மதிப்புடையனவே தவிர, இந்த மிஷின் விவகாரம் பெரிதல்ல. இது சாதாரணமாகக் கடைகளிலேயே கிடைக்கிற விஷயம். 2000, 3000 ரூபாய்க்கு இந்த மாதிரி மிஷின்கள் கிடைக்கின்றன. ஓரளவு சுமாராகப் பணத்தைக் கையாளும் நிலையில் இருப்பவர்கள்கூட, இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு பணத்தை எண்ணுகிறார்கள். ஆகையால், இது ஏதோ விபரீதமான விஷயம் என்பது போல நினைத்துக் கொண்டு, பணம் எண்ணுகிற மிஷன் கைப்பற்றப்பட்டது - என்பதை ஒரு பரபரப்புச் செய்தியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. - இப்படி ஒரு துக்ளக்கில் பதில்!

எப்படிப்பட்ட சாமர்த்தியமான பதில்! சம்பந்தப்பட்டவர் பிஜேபியைப் சேர்ந்தவர், - ஒரு மாநிலத்தின் துணை அமைச்சர் என்று வரும் பொழுது எவ்வளவு வக்கணையாக எழுதுகிறார்.

பணத்தை எண்ணும் அளவுக்கு மெஷின் வைத்திருந்தார் _ ஒரு துணை முதல் அமைச்சர் என்றால், அது சாதாரணமா? இந்த மெஷின் வீட்டுக்கு வீடு இருக்கிறது என்கிறார். (சோகூட வாங்கி வைத்துள்ளாரா என்று தெரியவில்லை)

அமைச்சராக இருக்கக் கூடியவருக்கு மாதச் சம்பளம் மட்டும் தானே இருக்க முடியும்; மெஷின் வைத்து எண்ணும் அளவுக்கு வருமானம் இருக்க முடியாதே - கூடாதே! _ படிப்பவர்களின் காதில் பூ சுற்றப் பார்க்கிறார். இந்தப் பார்ப்பனர்.

வருமான வரித்துறை - வேறு ஒரு கட்சிக்காரரின் வீட்டில் சோதனை செய்தபோது, பணம் எண்ணும் மெஷினைப் பறி முதல் செய்தால், இந்தக் கண்ணோட்டத்தோடு எழுதுவாரா சோ? சோவின் (வி)வாத முறை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!)

3. கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தமிழகத்தின் வாணிபம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் வளரும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ப. சிதம்பரம்  முயற்சிக்க வேண்டும். அவரது பிறந்த நாள் பரிசாக இந்த வேலையை அவருக்கு நான் அளிக் கிறேன் - என்று கருணாநிதி பேசியுள் ளாரே..?

பதில்: சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாக எந்த நன்மையையும் தரப் போவதில்லை. அதை முடிப்பது தண்டச் செலவு. ஏற்கெனவே பணம் வீணாகியிருக்கிறது. இன்னமும் அங்கே கொண்டு போய் பணத்தைக் கொட்டினால்,  மேலும் பணம்தான் வீணாகுமே தவிர, அதனால் தமிழகத்திற்கு எந்தப் பெரிய நன்மையும் கிடைக்காது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்களால் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, ஒரு புராதனச் சின்னத்தை, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிற இடத்தை, வேண்டு மென்றே சிதைக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கமும் இதில் இருக்கிறது என்ற சந்தேகத்திற்கும் இந்தத் திட்டம் இட மளித்து விட்டது. இந்தக்  காரணங் களினால் மத்திய அரசேகூட, இதை நிறை வேற்றுவதில் ஆர்வம் காட்டாமல்தான் இருக்கிறது.

ஆகையால், இதை மத்திய அரசு நிறை வேற்றும் என்ற நம்பிக்கையில், கலைஞர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பேசவில்லை. எதிர்காலத்தில் ஒரு வேளை  காங்கி ரஸுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் போனால், அப்போது அதற்குச் சில காரணங்களைக் காட்ட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டலாம்; அது அவ் வளவாக எடுபடாது. ஏனென்றால், அதில் கலைஞரே பத்துப் பதினைந்து நிலைகளை எடுத்திருக்கிறார். அத்துடன்கூட சேது சமுத்திரத்தையும் ஒரு காரணமாகக் காட்டினால், தான் காங்கிரஸ் கூட்டணியைக் கை விட்டதற்குக் கொள்கைதான் காரணமே தவிர, குடும்பப் பிரச்சினை காரண மல்ல என்று வாதிடலாம் என்பதுதான் அவருடைய திட்டமாக இருக்கும். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார். (துக்ளக் 16.1.2013).

150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்படும் திட்டம் இது. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நலன்கள், வளங்கள் குறித்து ஏதோ கலைஞர்  அவர்கள் கற்பனையாகச் சொல்வதுபோல் எழுதுவது திருவாளர் சோவின் வழக்க மான நரித்தன வார்த்தைகள்; பொருளாதார நிபுணர்கள், பல்வேறு ஆய்வுக்குழுக்கள் தான் அறிக்கைகளாகக் கொடுத்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 9 குழுக்கள் அதன்பின் இந்திய ஆட்சியில் மூன்று குழுக்கள், நிபுணர்களைக் கொண்ட 12 குழுக்கள் இந்தத் திட்டத்தின் அரு மையை - நலனை விரிவாக எடுத்துக் கூறி யுள்ளன.

1) மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு கப்பல்களின் பயண தூரம் 480 முதல் 840 கிலோ மீட்டர்  குறையும்.

2) இலங்கையைச் சுற்றிச் செல்லாமல் கப்பல்கள் குறுக்கு வழியில் வருவதால் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கப்பல் பயண நேரம் குறையும். ஒரு மணி நேர கப்பல் பயணத்திற்கு  ஆகும் செலவு தோராயமாக ரூ.50,000/-

3) சேது சமுத்திரத் திட்டத்தில் போடப் படும் முதலுக்கு இத்திட்டம் முடிந்த முதலாண்டில் நாலரை சதவிகித வருமானம் கிடைக்கும் 11ஆவது ஆண்டில் இந்த வருவாய் 7 சதவிகிதமாகவும், 15ஆவது ஆண்டில் இது எட்டரை சதவிகிதமாகவும் உயரும் 30 அடி ஆழ கால்வாய் 16ஆம் ஆண்டிலிருந்தும்  31 அடி  ஆழ கால்வாய் 17ஆவது ஆண்டிலிருந்தும் 35 அடி ஆழ கால்வாய் 24 ஆவது ஆண்டிலிருந்தும் லாபத்தில் இயங்கும்.

4) மிகக் குறைந்த செலவில் சேது கால்வாயைப் பராமரிக்க முடியும். கால்வாய் துவக்கப்பட்ட ஆண்டில் ஆண்டிற்கு ரூ.13.80 கோடி வருமானமும்,  ரூ.4.30 கோடி ரூபாய் பராமரிப்பு செலவும் ஏற்படும்.

5) சேதுக் கால்வாயில் செல்லும் கப்பல் களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் அன்னியச் செலாவணி கிடைக்கும்.
6) இக்கால்வாய் வெட்டப்பட்டு பயனுக்கு வருமானால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சி அடையும்.

7) தூத்துக்குடி துறைமுகமும் சேதுக் கால்வாயும் சேர்ந்து இந்திய நாட்டிற்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்.

8) ஏற்றுமதி, இறக்குமதி பெருகும், வாணிபமும் வளரும். இப்பகுதியில் புதிய தொழில்கள் தோன்றும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

9) பயணிகள் - கப்பல்களுக்கும், வணிகக் கப்பல்களுக்கும் பாதுகாப்பான கால்வாயாக சேதுக் கால்வாய் விளங்கும்.

10) புயல் அபாயமுள்ள இலங்கைக் கடற்கரையைச் சுற்றிக் கொண்டு செல்வது கப்பல்களுக்கு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்.

11) சேதுக் கால்வாயின் இருபுறமும் உள்ள துறைமுகங்கள் இதன் மூலம் வளர்ச்சி அடையும்  எண்ணூர். பாம்பன், வலிநோக்கம், குளச்சல், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புன்னைக் காயல், வேம்பார், திருக்கடையூர், புதுச்சேரி, சென்னை ஆகிய தமிழ் நாட்டுத் துறை முகங்கள் மிகுந்த வளர்ச்சியை அடையும்.

12) இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கையில் தமிழர் வாழும் ஈழப் பகுதியும் அனைத் துலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் பகுதிகளாக மாறும்.

13) நிலக்கரி, உப்பு, சிமெண்ட் போன்ற பெருமளவில் கொண்டு செல்லப்படும் பொருள்கள் கடல் மார்க்கமாக  இக்கால் வாய் மூலம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வழியேற்படும். தற்போது ஆண்டு தோறும் கிழக்குக் கடற்கரையோரமாக 25 லட்சம் டன் நிலக்கரியும் 30 லட்சம் டன் உப்பும், 20 லட்சம் டன் பிற  சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன.

14) இதன் மூலம் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் பொருளாதார ரீதியில் வளம் பெறும்.

15) கரையோர வர்த்தகம் பெருகி, 2000 முதல் 3000 டன் எடையுள்ள கப்பல்களின் போக்குவரத்து அதிகமாகும்.

16) மீன்பிடிக்கும் தோணிகள், கப்பல்கள் அதிக  அளவில் தொழில் செய்ய பயன ளிக்கும்.

இவ்வளவு அருமையான திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்படுகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டிய நேரம் இது!
இப்படியெல்லாம் தெரிவித்திருப்பது நிச்சயமாக மானமிகு கலைஞர் அவர்களோ; மானமிகு கி.வீரமணி அவர்களோ அல்ல.

இந்த நிபுணர்களைவிட மே(ல்)தாவியா திருவாளர் சோ?

பாரதீய ஜனதாவைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறாரே திருவாளர் சோ, அந்த ஆட்சிக் காலத்தில்தானே இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான வரைபடம் உள்படத் தயாரித்துக்  கொடுத்ததும் வாஜ்பேயி  பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில்தானே?

அதிமுகவின் இரண்டு தேர்தல் அறிக் கையிலும் இத்திட்டத்தின் அவசியத்தை  வலியுறுத்தவில்லையா - செல்வி ஜெயலலிதா?

அப்பொழுதெல்லாம் கனவில் வராத ராமபிரான் இப்பொழுதுதான் சோ கூட்டத் தின் முன் தோன்றி என்னைக் காப்பாற் றுங்கள், காப்பாற்றுங்கள்! என்று அப()யக் குரல் கொடுத்தாரா?

ஓர் அறிவியல் திட்டத்தில் புராணக் குப்பையைக் கொண்டு வந்து போட்டுக் குறுக்குச் சால் ஓட்டுபவர்கள், வேறு எந்தப் பிரச்சினையிலும்கூட கருத்துகள் கூறத் தகுதி படைத்தவர்கள்தானா என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் வினாவே!

4. கேள்வி: வெறும் இரண்டு, மூன்று மணி நேர மின்வெட்டிற்கே தி.மு.க.வை மக்கள் தோல்வியுறச் செய்தார்களே! தற்போது 18,19 மணி நேர மின்வெட்டு நிலவும் போது, அ.தி.மு.க.வை மக்கள் எப்படி தண் டிக்கப் போகிறார்களோ தெரியவில்லையே...? என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளாரே?

பதில்: ஒருவன் மற்றொருவனைக் கத்தியால் குத்தி  விடுகிறான். அப்படி சீரியஸாகக் காயப்பட்ட மனிதன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான். ஆஸ்பத்திரியில் டாக்டர், அவனுக்கு ரண சிகிச்சை செய்கிறார். அதற்காக கத்தியை பல இடங்களில் அவர் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்பொழுது அந்த நபரைக் கத்தியால் குத்தியவன் அநியாயம், நான் ஒரு முறை குத்தியதற்கே என்னைக் கைது செய்து விட்டார்கள்; வழக்குப் போட்டிருக்கிறார்கள். நான் பெரிய குற்றம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அந்த டாக்டரோ பலமுறை கத்தியால் அவனைக் குத்துகிறார். குத்தி விட்டு ஊசி கொண்டு தையல் வேறு போடுகிறார். பிறகு மீண்டும் குத்துகிறார், அறுக்கிறார். என்னென்னவோ செய்கிறார். அதெல்லாம் பரவாயில்லை. நான் குத்தியதுதான் தவறா?  இதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்  என்று கூறினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது ஸ்டாலினுடைய பேச்சு.
இப்படி ஒரு கேள்வி பதில் துக்ளக்கில் (16.1.2013 பக்கம் 31)

கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் உண்டா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு கிலோ இன்ன விலை என்று கூறுவதுதான் அக்ரகார அறிவாளி சோவின் பாணி.

நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை வெட்டி வீழ்த்திடுவேன் என்ற வீராப்புப்பற்றி சோவின் பேனா வாய் திறக்காதது ஏன்?
திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள் ளப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிக்காததற்குக் காரணம் என்ன?

மின்சாரத்தில்கூட திமுக மின்சாரம் என்று தரம் பிரித்து விட்டனரா?
ஆசை வெட்கம் அறியாது என்பார் கள்; அக்கிரகார அம்பிகளுக்கோ இனப் பற்று என்று வந்து விட்டால் கண் மண் தெரியாமல் அம்மணமாக ஓடக் கூடத் தயா ராக இருக்கக் கூடியவர்கள்தான் போலும்!

அறுவை சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர் சிலர் அறுவை சிகிச்சை செய் யும் கத்தியையே உள்ளே வைத்து விட்டு மேலே தையல் போட்டு விடுகிறார்களே _- அப்படிப்பட்டவர்களும் டாக்டர்கள் தானே! திருவாளர் சோ கூறும்  டாக்டர் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவராக இருக் கிறாரே என்பதுதான் பிரச்சனையே! (சோவுக்குத் தான் எழுதத் தெரியுமா? இடக்கு முடக்காக மற்றவர்களாலும் எழுத முடியும் என்பதை முதலில் சோ அய்யர் உணரட்டும்!)
ஒரே ஒரு துக்ளக் இதழில்  குடிநீரில் நஞ்சு கலப்பதுபோல தமிழர்களுக்கு எதிராக சோ கூட்டம் எழுத்துக்களைக் கொட்டித் தீர்க்கும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டாமா?

பாழாய்ப் போன அரசியலுக்காக பாஷாணத்தைப் பாயசம் என்று பருகலாமா? இந்த 2013லும் பார்ப்பனர்கள் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

துக்ளக்கில் சொட்டும் ஒவ்வொரு துளியும் ஆரியத்திற்கு ஆரிரரோ! திராவிடத்திற்கோ தீங்கானது என்பது நினைவிருக்கட்டும்! நினைவிருக்கட்டும்!!

நீஷப்பாஷை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதிட்டாராம். துக்ளக் குடுமிக்கு எரிச்சல் வியாதி வந்து விட்டது. இந்தத் தமிழ் உளறலுக்கு மருந்து தேவை என்று ஒரு துர்வாசர் கிளம்பி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது என்பது பஞ்சமா பாதகமா? ஏன் தாண்டிக் குதிக்கிறது துக்ளக்?

தமிழ் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! நீஷப்பாஷை என்று தானே அவாளின் பெரிய வாள் கருதுகிறார்.

தமிழ்நாட்டை விட்டுத் தள்ளுங்கள். வடமாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியில் வாதிடும் நிலை இருக்கத்தானே செய்கிறது - அதுபற்றியெல்லாம் எழுதுவதில்லையே -_ ஏன்?

இப்படி எழுதுகிற இந்தக் கூட்டத்துக்கு அவாளின் தாய் மொழியான சமஸ்கிருதத்தின்மீது பாசம் இல்லையா _ பற்று இல்லையா? ஏன் வெறி இல்லையா?

கோயில்களில் ஏன் சமஸ்கிருதம்? என்று கேட்டுப் பாருங்கள்.

தாண்டிதோண்டியில் குதிப்பார்கள். செத்த மொழிமீதே அவ்வளவு வெறி என்றால் உயிரோட்டம் உள்ள தமிழ்மீது தமிழர்கள்பற்றுக் கொள்ளக் கூடாதா? செத்துச் சுண்ணாம் பாகிப் போன சமஸ்கிருதத்துக்கு என்றே அவாள் ஆட்சிக் காலத்தில் ஓர் ஆண்டை அறிவித்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி இறைக்கவில்லையா?
           ******************************************

ஆங்கிலேயருக்குவக்காலத்தா?

வழக்கமாக ஒரு பல்லவியைப் ப டுவது பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)

எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா?

இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?

தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!

 அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே  அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!

இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!

நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).

ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!

பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!

தமிழர்கள் - பழமையானவர்களா?

தமிழர்கள் - பழமையானவர்களா? ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம். சிந்துவெளி நாகரிகம்: சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன. நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன: 1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது. 2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை. 3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை. 4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது. 5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை. 6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது. 7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. 8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.) 9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன. 10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 ) 11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை. 12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர். ‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர். கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994). சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது. அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர். சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express - Madras - 5 August 1994) Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர். தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு: 1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்” புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும் 'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன. சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன். புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு. சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும். எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது. சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன. பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும். எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன. நதிகள், மலைகளின் பெயர்கள் நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பற்றுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது. பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பற்றுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது. இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது. இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது. தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு: 2 - பூம்புகார் அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார். 18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி. ''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது. கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது. இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார். இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது. இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார். சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார். மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார். மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள் 1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். 2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது. 3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது. 4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது) 5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது. 6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது. 7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன. 8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன. 9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது. 10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின. 11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது. 12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது. 13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் நம்பகத் தன்மை: 1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார். 2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. 3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார். 4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன. 6படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன. 7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்: 1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. 3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. 4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. 6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன. 7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை. 8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.. நன்றி முத்தமிழ் வேந்தன் (குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை)

மோடியின் பித்தலாட்டம்!

மோடியின் பித்தலாட்டம்! From : http://suunapaana.blogspot.in/2013/09/blog-post_25.html சமீப காலமாக மோடிமேனியா என்ற கொடிய நோய் பரவி வருகிறது. கோயபல்ஸ் பாணியில் குஜராத் முன்னேற்றம் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அவை சரியா என சற்றே உரசி பார்ப்போம். இந்திய திட்ட குழு புள்ளிவிவரங்களின் படி குஜராத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பார்ப்போம். 1. வறுமை கோட்டிற்கு கீழே குறைவாக வாழும் மக்கள் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 5வது இடம். குஜராத்திற்கு 9வது இடம் தான். குஜராத்தில் கால்வாசி பேர் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்றனர் No.States% Below Poverty LinePopulation 1Jammu & Kashmir9.412548926 2Kerala1233387677 3Delhi14.216753235 4Punjab15.927704236 5Tamil Nadu17.172138958 6Uttarakhand1810116752 7Haryana20.125353081 8Andhra Pradesh21.184665533 9Gujarat2360383628 10Karnataka23.661130704 (குறிப்பு - மக்கள் தொகை ஒரு கோடிக்கு கீழ் இருக்கும் மாநிலங்களை சேர்க்கவில்லை. அப்படி சேர்த்தால் குஜராத்தின் இடம் இன்னும் கீழே செல்லும்.) 2. சமூகத்தின் நாகரிகத்தை அளக்கும் ஆண்கள் பெண்கள் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம். குஜராத்திற்கு 14வது இடம் தான். அதாவது 1000 ஆண்களில் 995 பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால் குஜராத்தில் 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இது தேசிய சராசரியை விட (940) வெகு குறைவு. No.StateNo of Females Per 1000 Males 1Kerala1084 2Tamil Nadu995 3Andhra Pradesh992 4Chhatisgarh991 5Orissa978 6Karnataka968 7Uttarakhand963 8Assam954 9Jharkhand947 10West Bengal947 11Madhya Pradesh930 12Rajasthan926 13Maharashtra925 14Gujarat918 3. குழந்தை பிறந்தவுடன் குறைவாக இறக்கும் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம். குஜராத்திற்கு 10வது இடம் தான். அதாவது 1000 குழந்தை பிறப்புகளில் தமிழ்நாட்டில் 22 குழந்தைகள் இறக்கின்றனர். ஆனால் குஜராத்தில் 41 குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு நாட்டின் மருத்துவம், ஆரோக்கியம், மனிதவளம் ஆகி யவற்றை குறிக்கும் இந்த விகிதத்தில் குஜராத் மிகவும் பின் தங்கியுள்ளது. No.StateInfant Deaths per 1000 birth 1Kerala12 2Tamil Nadu22 3Maharashtra25 4Delhi28 5Punjab30 6West Bengal32 7Karnataka35 8Uttarakhand36 9Jharkhand39 10Gujarat41 4. எழுத்தறிவு விகிதத்திலும் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கி உள்ளது. No.StateLiteracy Rate (2011) 1Kerala93.91 2Delhi86.34 3Maharashtra82.91 4Tamil Nadu80.33 5Uttarakhand79.63 6Gujarat79.31 இப்படி சமூக வாழ்க்கை தரத்தை அளக்கும் குறியீடுகளில் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கி உள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம் தான் சிறந்த ஆட்சியின் அறிகுறி என்றால், அதை கோரும் தகுதி மோடியின் குஜராத்திற்கு கிடையாது. குஜராத்தை விட முன்னனியில் இருக்கும் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கே அந்த தகுதி உண்டு. அதிமுக-வினர் இதை குறித்து கொள்ளலாம். குஜராத் முன்னேறிவிட்டது என்பது மாபெரும் பொய். புள்ளிராஜாக்கள் சொல்லும் குஜராத் முன்னேற்றம், வளர்ச்சி என்பது அண்டபுளுகு. புள்ளி விவர மோசடி செய்யும் மோடி வித்தைகளை கண்டு ஏமாற வேண்டாம். பொய், பித்தலாட்டங்கள் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் நச்சு கிருமிகளை புறந்தள்ளுவோம்! (தோழர் மருதையன் 2013, செப்டம்பர் 22 அன்று திருச்சியில் மோடியின் முகமூடியை கிழிக்கும் பொதுக்கூட்டத்தில் நடத்திய உரையை தழுவி எழுதியது.)