Tuesday, October 8, 2013
கருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்!
Thursday, September 26, 2013
பெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா? பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
ஒவ்வொரு துளியும் விஷம்!
திருவாளர் சோவின் துக்ளக் - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதிகாரமே தன் சுட்டு விரலில் வைத்திருப்பது போல ஆண வத்துடன் திமிர் முறித்து நடைபோடுகிறது!
பொங்கலன்று சென்னையில் அவர் பேசிய பேச்சும், உடல் நளினங்கள் (Body Language) அத்தன்மையில் எகிறி இருந்ததைப் பார்வையாளர்கள் உணர்ந்திருந்தனர்; - பலரும் இந்த வகையில் நம்மிடம் கருத்துத் தெரிவித்தனர். (அவருக்கே உரித்தான கோமாளித்தனத்துக்குப் பஞ்சமில்லை, மேடையில் சட்டையைக் கழற்றி விகடக் கச்சேரியும் நடத்தியுள்ளார்)
16.1.2013 நாளிட்ட ஒரே ஒரு துக்ளக் இதழை எடுத்துக் கொள்ளலாம்.
1. ஆளும் கட்சி எடுத்துள்ள முடிவின் பின்னணி - எனும் தலைப்பில் ஒரு கட்டுரை. நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியையும் சேர்ந்து அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, செல்வி ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆகப் போகிறாராம். போகட்டும் போகட்டும்.
எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது சரியில்லையாம். என்ன செய்ய வேண்டுமாம்?
கருத்துத்தானம் செய்கிறது துக்ளக். இடதுசாரிகள் மற்றும் சில சிறிய கட்சி களுக்கு அதிமுக அணியில் நிச்சயம் இடம் இருக்கும் என்றே பத்திரிகையாளர்கள் பலரும் இடது கட்சிகளைச் சேர்ந்தவர் களும் நினைக்கிறார்கள் - என்கிறது துக்ளக்
நேரிடையாகச் சொல்வது போல் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் இந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும் - அதற்காக யாரோ சிலர் நினைக்கிறார்கள் - என்பதை எவ்வளவு தளுக்காக தந்திரமாக சோ சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்.
இது திருவாளர் சோவின் பாணி. பிஜேபி அதிமுக பற்றி சில நேரங்களில் குறை சொல்வதுபோல எழுதும்போதுகூட, அக் கட்சி எப்படி நடந்து கொண்டால் நல்லது என்கிற உள்ளடக்கம் கொண்ட வாசகங் களும் இடம் பெற்றிருக்கும் - அவ்வளவு அக்கறை துள்ளிக் குதிக்கும்; ஆசாபாசம் அத்தகையது!
2. கேள்வி: கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா வீட்டிலிருந்து பணத்தை எண்ணும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி...?
பதில்: அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட மற்ற விஷயங்கள்தான் பெரும் மதிப்புடையனவே தவிர, இந்த மிஷின் விவகாரம் பெரிதல்ல. இது சாதாரணமாகக் கடைகளிலேயே கிடைக்கிற விஷயம். 2000, 3000 ரூபாய்க்கு இந்த மாதிரி மிஷின்கள் கிடைக்கின்றன. ஓரளவு சுமாராகப் பணத்தைக் கையாளும் நிலையில் இருப்பவர்கள்கூட, இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு பணத்தை எண்ணுகிறார்கள். ஆகையால், இது ஏதோ விபரீதமான விஷயம் என்பது போல நினைத்துக் கொண்டு, பணம் எண்ணுகிற மிஷன் கைப்பற்றப்பட்டது - என்பதை ஒரு பரபரப்புச் செய்தியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. - இப்படி ஒரு துக்ளக்கில் பதில்!
எப்படிப்பட்ட சாமர்த்தியமான பதில்! சம்பந்தப்பட்டவர் பிஜேபியைப் சேர்ந்தவர், - ஒரு மாநிலத்தின் துணை அமைச்சர் என்று வரும் பொழுது எவ்வளவு வக்கணையாக எழுதுகிறார்.
பணத்தை எண்ணும் அளவுக்கு மெஷின் வைத்திருந்தார் _ ஒரு துணை முதல் அமைச்சர் என்றால், அது சாதாரணமா? இந்த மெஷின் வீட்டுக்கு வீடு இருக்கிறது என்கிறார். (சோகூட வாங்கி வைத்துள்ளாரா என்று தெரியவில்லை)
அமைச்சராக இருக்கக் கூடியவருக்கு மாதச் சம்பளம் மட்டும் தானே இருக்க முடியும்; மெஷின் வைத்து எண்ணும் அளவுக்கு வருமானம் இருக்க முடியாதே - கூடாதே! _ படிப்பவர்களின் காதில் பூ சுற்றப் பார்க்கிறார். இந்தப் பார்ப்பனர்.
வருமான வரித்துறை - வேறு ஒரு கட்சிக்காரரின் வீட்டில் சோதனை செய்தபோது, பணம் எண்ணும் மெஷினைப் பறி முதல் செய்தால், இந்தக் கண்ணோட்டத்தோடு எழுதுவாரா சோ? சோவின் (வி)வாத முறை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!)
3. கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தமிழகத்தின் வாணிபம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் வளரும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ப. சிதம்பரம் முயற்சிக்க வேண்டும். அவரது பிறந்த நாள் பரிசாக இந்த வேலையை அவருக்கு நான் அளிக் கிறேன் - என்று கருணாநிதி பேசியுள் ளாரே..?
பதில்: சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாக எந்த நன்மையையும் தரப் போவதில்லை. அதை முடிப்பது தண்டச் செலவு. ஏற்கெனவே பணம் வீணாகியிருக்கிறது. இன்னமும் அங்கே கொண்டு போய் பணத்தைக் கொட்டினால், மேலும் பணம்தான் வீணாகுமே தவிர, அதனால் தமிழகத்திற்கு எந்தப் பெரிய நன்மையும் கிடைக்காது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்களால் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, ஒரு புராதனச் சின்னத்தை, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிற இடத்தை, வேண்டு மென்றே சிதைக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கமும் இதில் இருக்கிறது என்ற சந்தேகத்திற்கும் இந்தத் திட்டம் இட மளித்து விட்டது. இந்தக் காரணங் களினால் மத்திய அரசேகூட, இதை நிறை வேற்றுவதில் ஆர்வம் காட்டாமல்தான் இருக்கிறது.
ஆகையால், இதை மத்திய அரசு நிறை வேற்றும் என்ற நம்பிக்கையில், கலைஞர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பேசவில்லை. எதிர்காலத்தில் ஒரு வேளை காங்கி ரஸுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் போனால், அப்போது அதற்குச் சில காரணங்களைக் காட்ட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டலாம்; அது அவ் வளவாக எடுபடாது. ஏனென்றால், அதில் கலைஞரே பத்துப் பதினைந்து நிலைகளை எடுத்திருக்கிறார். அத்துடன்கூட சேது சமுத்திரத்தையும் ஒரு காரணமாகக் காட்டினால், தான் காங்கிரஸ் கூட்டணியைக் கை விட்டதற்குக் கொள்கைதான் காரணமே தவிர, குடும்பப் பிரச்சினை காரண மல்ல என்று வாதிடலாம் என்பதுதான் அவருடைய திட்டமாக இருக்கும். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார். (துக்ளக் 16.1.2013).
150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்படும் திட்டம் இது. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நலன்கள், வளங்கள் குறித்து ஏதோ கலைஞர் அவர்கள் கற்பனையாகச் சொல்வதுபோல் எழுதுவது திருவாளர் சோவின் வழக்க மான நரித்தன வார்த்தைகள்; பொருளாதார நிபுணர்கள், பல்வேறு ஆய்வுக்குழுக்கள் தான் அறிக்கைகளாகக் கொடுத்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 9 குழுக்கள் அதன்பின் இந்திய ஆட்சியில் மூன்று குழுக்கள், நிபுணர்களைக் கொண்ட 12 குழுக்கள் இந்தத் திட்டத்தின் அரு மையை - நலனை விரிவாக எடுத்துக் கூறி யுள்ளன.
1) மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு கப்பல்களின் பயண தூரம் 480 முதல் 840 கிலோ மீட்டர் குறையும்.
2) இலங்கையைச் சுற்றிச் செல்லாமல் கப்பல்கள் குறுக்கு வழியில் வருவதால் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கப்பல் பயண நேரம் குறையும். ஒரு மணி நேர கப்பல் பயணத்திற்கு ஆகும் செலவு தோராயமாக ரூ.50,000/-
3) சேது சமுத்திரத் திட்டத்தில் போடப் படும் முதலுக்கு இத்திட்டம் முடிந்த முதலாண்டில் நாலரை சதவிகித வருமானம் கிடைக்கும் 11ஆவது ஆண்டில் இந்த வருவாய் 7 சதவிகிதமாகவும், 15ஆவது ஆண்டில் இது எட்டரை சதவிகிதமாகவும் உயரும் 30 அடி ஆழ கால்வாய் 16ஆம் ஆண்டிலிருந்தும் 31 அடி ஆழ கால்வாய் 17ஆவது ஆண்டிலிருந்தும் 35 அடி ஆழ கால்வாய் 24 ஆவது ஆண்டிலிருந்தும் லாபத்தில் இயங்கும்.
4) மிகக் குறைந்த செலவில் சேது கால்வாயைப் பராமரிக்க முடியும். கால்வாய் துவக்கப்பட்ட ஆண்டில் ஆண்டிற்கு ரூ.13.80 கோடி வருமானமும், ரூ.4.30 கோடி ரூபாய் பராமரிப்பு செலவும் ஏற்படும்.
5) சேதுக் கால்வாயில் செல்லும் கப்பல் களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் அன்னியச் செலாவணி கிடைக்கும்.
6) இக்கால்வாய் வெட்டப்பட்டு பயனுக்கு வருமானால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சி அடையும்.
7) தூத்துக்குடி துறைமுகமும் சேதுக் கால்வாயும் சேர்ந்து இந்திய நாட்டிற்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்.
8) ஏற்றுமதி, இறக்குமதி பெருகும், வாணிபமும் வளரும். இப்பகுதியில் புதிய தொழில்கள் தோன்றும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
9) பயணிகள் - கப்பல்களுக்கும், வணிகக் கப்பல்களுக்கும் பாதுகாப்பான கால்வாயாக சேதுக் கால்வாய் விளங்கும்.
10) புயல் அபாயமுள்ள இலங்கைக் கடற்கரையைச் சுற்றிக் கொண்டு செல்வது கப்பல்களுக்கு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்.
11) சேதுக் கால்வாயின் இருபுறமும் உள்ள துறைமுகங்கள் இதன் மூலம் வளர்ச்சி அடையும் எண்ணூர். பாம்பன், வலிநோக்கம், குளச்சல், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புன்னைக் காயல், வேம்பார், திருக்கடையூர், புதுச்சேரி, சென்னை ஆகிய தமிழ் நாட்டுத் துறை முகங்கள் மிகுந்த வளர்ச்சியை அடையும்.
12) இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கையில் தமிழர் வாழும் ஈழப் பகுதியும் அனைத் துலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் பகுதிகளாக மாறும்.
13) நிலக்கரி, உப்பு, சிமெண்ட் போன்ற பெருமளவில் கொண்டு செல்லப்படும் பொருள்கள் கடல் மார்க்கமாக இக்கால் வாய் மூலம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வழியேற்படும். தற்போது ஆண்டு தோறும் கிழக்குக் கடற்கரையோரமாக 25 லட்சம் டன் நிலக்கரியும் 30 லட்சம் டன் உப்பும், 20 லட்சம் டன் பிற சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன.
14) இதன் மூலம் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் பொருளாதார ரீதியில் வளம் பெறும்.
15) கரையோர வர்த்தகம் பெருகி, 2000 முதல் 3000 டன் எடையுள்ள கப்பல்களின் போக்குவரத்து அதிகமாகும்.
16) மீன்பிடிக்கும் தோணிகள், கப்பல்கள் அதிக அளவில் தொழில் செய்ய பயன ளிக்கும்.
இவ்வளவு அருமையான திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்படுகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டிய நேரம் இது!
இப்படியெல்லாம் தெரிவித்திருப்பது நிச்சயமாக மானமிகு கலைஞர் அவர்களோ; மானமிகு கி.வீரமணி அவர்களோ அல்ல.
இந்த நிபுணர்களைவிட மே(ல்)தாவியா திருவாளர் சோ?
பாரதீய ஜனதாவைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறாரே திருவாளர் சோ, அந்த ஆட்சிக் காலத்தில்தானே இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான வரைபடம் உள்படத் தயாரித்துக் கொடுத்ததும் வாஜ்பேயி பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில்தானே?
அதிமுகவின் இரண்டு தேர்தல் அறிக் கையிலும் இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தவில்லையா - செல்வி ஜெயலலிதா?
அப்பொழுதெல்லாம் கனவில் வராத ராமபிரான் இப்பொழுதுதான் சோ கூட்டத் தின் முன் தோன்றி என்னைக் காப்பாற் றுங்கள், காப்பாற்றுங்கள்! என்று அப()யக் குரல் கொடுத்தாரா?
ஓர் அறிவியல் திட்டத்தில் புராணக் குப்பையைக் கொண்டு வந்து போட்டுக் குறுக்குச் சால் ஓட்டுபவர்கள், வேறு எந்தப் பிரச்சினையிலும்கூட கருத்துகள் கூறத் தகுதி படைத்தவர்கள்தானா என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் வினாவே!
4. கேள்வி: வெறும் இரண்டு, மூன்று மணி நேர மின்வெட்டிற்கே தி.மு.க.வை மக்கள் தோல்வியுறச் செய்தார்களே! தற்போது 18,19 மணி நேர மின்வெட்டு நிலவும் போது, அ.தி.மு.க.வை மக்கள் எப்படி தண் டிக்கப் போகிறார்களோ தெரியவில்லையே...? என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளாரே?
பதில்: ஒருவன் மற்றொருவனைக் கத்தியால் குத்தி விடுகிறான். அப்படி சீரியஸாகக் காயப்பட்ட மனிதன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான். ஆஸ்பத்திரியில் டாக்டர், அவனுக்கு ரண சிகிச்சை செய்கிறார். அதற்காக கத்தியை பல இடங்களில் அவர் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்பொழுது அந்த நபரைக் கத்தியால் குத்தியவன் அநியாயம், நான் ஒரு முறை குத்தியதற்கே என்னைக் கைது செய்து விட்டார்கள்; வழக்குப் போட்டிருக்கிறார்கள். நான் பெரிய குற்றம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அந்த டாக்டரோ பலமுறை கத்தியால் அவனைக் குத்துகிறார். குத்தி விட்டு ஊசி கொண்டு தையல் வேறு போடுகிறார். பிறகு மீண்டும் குத்துகிறார், அறுக்கிறார். என்னென்னவோ செய்கிறார். அதெல்லாம் பரவாயில்லை. நான் குத்தியதுதான் தவறா? இதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது ஸ்டாலினுடைய பேச்சு.
இப்படி ஒரு கேள்வி பதில் துக்ளக்கில் (16.1.2013 பக்கம் 31)
கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் உண்டா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு கிலோ இன்ன விலை என்று கூறுவதுதான் அக்ரகார அறிவாளி சோவின் பாணி.
நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை வெட்டி வீழ்த்திடுவேன் என்ற வீராப்புப்பற்றி சோவின் பேனா வாய் திறக்காதது ஏன்?
திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள் ளப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிக்காததற்குக் காரணம் என்ன?
மின்சாரத்தில்கூட திமுக மின்சாரம் என்று தரம் பிரித்து விட்டனரா?
ஆசை வெட்கம் அறியாது என்பார் கள்; அக்கிரகார அம்பிகளுக்கோ இனப் பற்று என்று வந்து விட்டால் கண் மண் தெரியாமல் அம்மணமாக ஓடக் கூடத் தயா ராக இருக்கக் கூடியவர்கள்தான் போலும்!
அறுவை சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர் சிலர் அறுவை சிகிச்சை செய் யும் கத்தியையே உள்ளே வைத்து விட்டு மேலே தையல் போட்டு விடுகிறார்களே _- அப்படிப்பட்டவர்களும் டாக்டர்கள் தானே! திருவாளர் சோ கூறும் டாக்டர் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவராக இருக் கிறாரே என்பதுதான் பிரச்சனையே! (சோவுக்குத் தான் எழுதத் தெரியுமா? இடக்கு முடக்காக மற்றவர்களாலும் எழுத முடியும் என்பதை முதலில் சோ அய்யர் உணரட்டும்!)
ஒரே ஒரு துக்ளக் இதழில் குடிநீரில் நஞ்சு கலப்பதுபோல தமிழர்களுக்கு எதிராக சோ கூட்டம் எழுத்துக்களைக் கொட்டித் தீர்க்கும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டாமா?
பாழாய்ப் போன அரசியலுக்காக பாஷாணத்தைப் பாயசம் என்று பருகலாமா? இந்த 2013லும் பார்ப்பனர்கள் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
துக்ளக்கில் சொட்டும் ஒவ்வொரு துளியும் ஆரியத்திற்கு ஆரிரரோ! திராவிடத்திற்கோ தீங்கானது என்பது நினைவிருக்கட்டும்! நினைவிருக்கட்டும்!!
நீஷப்பாஷை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதிட்டாராம். துக்ளக் குடுமிக்கு எரிச்சல் வியாதி வந்து விட்டது. இந்தத் தமிழ் உளறலுக்கு மருந்து தேவை என்று ஒரு துர்வாசர் கிளம்பி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது என்பது பஞ்சமா பாதகமா? ஏன் தாண்டிக் குதிக்கிறது துக்ளக்?
தமிழ் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! நீஷப்பாஷை என்று தானே அவாளின் பெரிய வாள் கருதுகிறார்.
தமிழ்நாட்டை விட்டுத் தள்ளுங்கள். வடமாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியில் வாதிடும் நிலை இருக்கத்தானே செய்கிறது - அதுபற்றியெல்லாம் எழுதுவதில்லையே -_ ஏன்?
இப்படி எழுதுகிற இந்தக் கூட்டத்துக்கு அவாளின் தாய் மொழியான சமஸ்கிருதத்தின்மீது பாசம் இல்லையா _ பற்று இல்லையா? ஏன் வெறி இல்லையா?
கோயில்களில் ஏன் சமஸ்கிருதம்? என்று கேட்டுப் பாருங்கள்.
தாண்டிதோண்டியில் குதிப்பார்கள். செத்த மொழிமீதே அவ்வளவு வெறி என்றால் உயிரோட்டம் உள்ள தமிழ்மீது தமிழர்கள்பற்றுக் கொள்ளக் கூடாதா? செத்துச் சுண்ணாம் பாகிப் போன சமஸ்கிருதத்துக்கு என்றே அவாள் ஆட்சிக் காலத்தில் ஓர் ஆண்டை அறிவித்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி இறைக்கவில்லையா?
******************************************
ஆங்கிலேயருக்குவக்காலத்தா?
வழக்கமாக ஒரு பல்லவியைப் ப டுவது பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)
எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா?
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?
தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!
அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!
இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!
நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).
ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!
பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
தமிழர்கள் - பழமையானவர்களா?
தமிழர்கள் - பழமையானவர்களா?
ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்
தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.
உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.
கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது.
பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பற்றுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பற்றுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது.
இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது.
சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்..
நன்றி முத்தமிழ் வேந்தன் (குழும மின் அஞ்சலில் வந்த கட்டுரை)
மோடியின் பித்தலாட்டம்!
Subscribe to:
Posts (Atom)