Sunday, December 30, 2012

அயோத்தி

My Sincere Thanks to 

http://suransukumaran.blogspot.in/2012/12/blog-post_7825.html

 

அயோத்தி

1949 ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியில் நடைபெற்ற ஒரு சம்பவம், அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் வன்முறையால் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் பொறுப்பேற்ற ஐந்து பிரதம மந்திரிகளுக்கும் இந்த விவகாரம் தீராத தலைவலியை உண்டாக்கியது. 
சராயு நதி, நேபாள நாட்டின் எல்லையோரம் வழியாக வட  இந்தியாவில் நுழைந்து கங்கையுடன் சங்கமித்து அயோத்தி நகரம் வழியாக பாய்ந்து செல்கிறது. 1949ல் அயோத்தி  நகரம் கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் மடங்கள் நிறைந்த ஒரு நகராக அறியப்படுகிறது. பண்டைக் காலம் முதல் இந்நகரம், ராமரின் பிறந்த ஊராக கூறப்பட்டு வருகிறது. "அயோத்தி" என்பதற்கு "எவராலும் வெல்ல முடியாத" என்று சமஸ்கிருதத்தில் பொருள் கொள்ளப்படுகிறது. இந்நகரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வசித்து வந்தாலும், நெற்றியில் பட்டை  தீட்டிக்கொண்டு, நீண்ட தாடியுடனும், பெரிய அங்கியுடனும் சுற்றி வரும் சாதுக்களால் இன்று இருப்பது போலவே அன்றும் நிறைந்து காணப்பட்டது. 
1930ல் நாற்பது வயது மதிக்கத்தக்க அபிராமதாஸ் என்கிற ஒரு சமயகுரு பீகாரில் இருந்து அயோத்திக்கு வந்திருந்தார். இவர் தீவிரமான ராம பக்தராவார். அவருடைய சீடர்கள் கூறுகையில், "ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வதே தனது வாழ்வின் லட்சியம்" என்று சூளுரைத்து வந்ததாக தெரிவிக்கின்றனர். அவர் கூறிய இடத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் முகலாய சக்கரவர்த்தியான பாபரின் படைகள் கட்டிய மசூதி ஒன்று இருந்து வந்தது. குரான் மற்றும் பெர்சிய மொழி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட செய்யுள் அடிகள் அதன் சுவர்கள் முழுவதும் காணப்படுகின்றன. 
மசூதி இருந்த இடம் ஒரு சுவரால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் ஒரு சிறிய மர  மேடை அமைத்து அதன் மீது ஒரு ராமர் சிலையை வைத்து இந்துக்கள் வழிபட்டு வந்தனர். திரு அபிராம தாஸுக்கு  ராமர் சிலையை அந்த மசூதிக்கு உள்ளேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விபரித எண்ணம் தோன்றியது. அவரைப் போலவே பல சாதுக்களுக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.
அவர்கள், அங்கே பழங்காலத்தில் ஒரு இந்துக் கோயில் இருந்ததாகவும், அதை தகர்த்துவிட்டு இந்த மசூதி எழுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறி வந்தனர். இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகவே இரு பிரிவினருக்கும் அடிக்கடி வன்முறை வெடித்து வந்துள்ளது.  
அபிராம தாஸ் தன சீடர்களிடம், தன்  கனவில் அடிக்கடி ராமபிரான் அந்த மசூதியின் மைய மண்டபத்தில் தோன்றி காட்சி தருவதாக கூறிவந்தார் 
1949 ஆம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில், அவர் தான் கண்ட கனவை பாயிசாபாத் தின் நகர சட்டநடுவரான  (மாஜிஸ்திரேட்) குரு தத் சிங்கிடம் தெரிவித்தார். ஆச்சரியப்பட்டுபோன திரு சிங், "சகோதரரே, எனக்கும் இந்தக் கனவு நெடு நாட்களுக்கு முன்பே தோன்றியது, இப்போது உங்களுக்கு வந்துள்ளது" என்றார். பின்பு இருவரும் ராமரின் உருவச்சிலையை அந்த இடத்தில் எவ்வாறு  வைப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் இறங்கியதாக திரு  சிங்கின் மகனான திரு குரு பஸ்வந்த் சிங்க¤டம¢ தெரிவிக்கிறார்.  
அதன் பிறகு ஏற்பட்ட சம்பவத்தை பல இந்துக்கள் தெய்வச் செயல் என்றே நம்ப ஆரம்பித்தனர். ஆனால் திரு குரு பஸ்வந்த் சிங் இதை மறுத்து, மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு காரியம் நடந்துள்ளதாக தெரிவிக்கிறார். 
பிரிவினைக்கு முன்னால், அதாவது 1941 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்  தொகை, மொத்த மக்கள் தொகையில் 24.4% ஆக இருந்துள்ளது. பிரிவினைக்கு பின்னர் ஒரு பத்து வருடம் கழித்து அது 10% ஆக  குறைந்துள்ளது. 
பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு நேரு, இந்தியாவை பல வகையில் சீர்படுத்தி, பல மதங்கள் ஒன்றாக, சகோதரத்துவத்துடன் வாழவும், உலக அரங்கில் இந்தியா  ஒரு மத சார்பற்ற நாடாக அடையாளம் காணப்பட பெரிதும் பாடுபட்டார். ஆனாலும் பல இந்துக்கள், பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தான் நாடு உண்டானதையும், "விருப்பப்பட்ட இஸ்லாமியர்கள் இங்கேயே இருக்கலாம், அல்லது அங்கே செல்லலாம்" என்கிற வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.  காங்கிரஸ் கட்சியிலேயே சிலர், இந்தியாவை இந்து சார்பு கொண்ட நாடாக மாற்ற ஆர்வம் கொண்டிருந்தனர். அனைத்திந்திய இந்து மகாசபை அமைவதற்கு இவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயும் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் தான். 1949 ஆம் ஆண்டு அவன் தூக்கிலிடப்பட்டான்.  
பிரிவினைக்கு பிறகும் அயோத்தியில் பல இஸ்லாமியர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். இஸ்லாமிய கலைத் தொழிலாளி உண்டாக்கிய இந்துக் கடவுள் சிலைகளை இந்துக்கள் வணங்கி வந்தனர். இந்துக் கோயில் குருக்கள், பூஜைக்கு துணிகளையும் மலர்களையும் இஸ்லாமியக் கடைக்காரரிடமிருந்து வாங்கி வருகின்றனர். அயோத்தியில் உள்ள ஒரு இந்துக் கோயிலுக்கு ஒரு இஸ்லாமிய மேலாளரும் உள்ளார் என்பதும் சுவாரஸ்யமான ஒரு தகவல்.  அன்று, முகம்மது அசிம் அன்சாரி என்கிற 25 வயது தையல்காரர் "நாங்கள் ஏன் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? நாங்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள்" என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது. 
பாயிசாபாதின் சட்ட நடுவரான திரு குரு தத் சிங், அலஹாபாத் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்றவராவார். சிவில் சர்வீஸ் துறையில் சேர்ந்தாலும் சில விஷயங்களில் பிரிட்டிஷ் மேலதிகாரிகளிடம் வேறுபட்டு நின்றார். இவர் தலைப்பாகை அணிந்து கொள்வார், அவர்களோ தொப்பி அணிவதை விரும்புவர். நீங்கள் ஏன் தொப்பி அணியக் கூடாது? என்று அவர்கள் கேட்டால், நீங்கள் ஏன் தலைப்பாகை அணியக் கூடாது? என்று எதிர் கேள்வி கேட்பார் என்று அவர் மகன் கூறுகிறார். 
கலவரங்களை அடக்குவதில் பாகுபாடு காட்டாமல், கண்டிப்புடன் செயல்பட்டார். சில சமயங்களில் இந்துக்களிடமே அவர் "ஏதேனும் நீங்கள் வன்முறையோ குழப்பமோ விளைவித்தால், "உள்ளே லாக்கப்பில் தள்ளிவிடவும் தயங்க மாட்டேன்" என்றும் கண்டிப்பு காட்டுவார்.  இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடும் போது , "நீங்கள் எல்லோரும் என் சகோதரர்கள், நாம் எல்லோரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்"  என்று அன்பொழுக பேசுவார் என்றும் அவர் மகன் கூறுகிறார். 
பணியில் திறம்பட நேர்மையாக பணியாற்றினாலும், சிறுபான்மையினரை குறிப்பாக இஸ்லாமியர்களை திருப்தி படுத்தும் அரசாங்கத்தின் போக்கு அவருக்கு பெருத்த மன வேதனையை உண்டாக்கியது. பாகிஸ்தான் என்கிற நாடு உதயமானதை அவர் விரும்பவில்லை என்றாலும், "உங்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்கப் பட்டதென்றால் , நீங்கள் அங்கு செல்வது தான் முறை" என்கிற சிந்தனை அவரிடம் இருந்ததாக அவர் மகன் கூறுகிறார். 
திரு சிங் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். எந்த விதமான தீய பழக்கங்களும் அவரிடம் இல்லை. கல்லூரிக் காலம்  தொட்டு ராமபிரானை கடவுளாக வணங்கி வந்தார். ராமர் என்பவர் விஷ்ணுவின் மறுவடிவம், விஷ்ணு காக்கும் கடவுளாகவும், பிரம்மா படைப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் அறியப்படுவர்.  
இந்து மத குறிப்புகளின் படி, ராமர் அயோத்தியில் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் பிறந்தவர். அவர் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாவார். அவர் சூரிய வம்சத்து வழித் தோன்றலாக அறியப்பட்டவராவார்.  ராமர் "மரியாதை  புருஷோத்தமர்" என்கிற உயர்ந்த பட்டத்தையும் பெற்றவராக திகழ்ந்தார். தன்  மனைவியான சீதாவை இலங்கை அரக்கனான ராவணனிடம் இருந்து போரிட்டு வென்று, அவளை  மீட்டு அயோத்தி நகருக்கு திரும்பினார் என்று சமஸ்கிருத ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அயோத்தியின் அரசனாக திறம்பட ஆட்சி செய்தார் என்றும், இறுதிக் காலத்தில் அயோத்தியில் ஒரு கதவு வழியாக சொர்கத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.  
திரு சிங்கிற்கு வயதான அதே வேளையில், ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யும் வைராக்கியமும் அதிகரித்தது. இஸ்லாமியர்கள் பாபர் மசூதியை மனமுவந்து தங்களுக்கு தர வேண்டும் என்றும் விரும்பினார். "நான் அவர்கள் மதத்தை மதிக்கும் போது, அவர்களும் அது போல செய்யலாமே" என்று கூறுவார் என்று அவர் மகன் தெரிவித்துள்ளார்.  
1940ம¢ ஆண¢டு மத்தியில், திரு சிங், இந்திய தேசிய  சிவில் துறையில் பணிபுரியும் நிர்வாகச் செயலரான திரு கே.கே.நாயரை சந்தித்து பேசினார்.  இந்தத் துறைதான் இன்றைய ஐ.ஏ.எஸ். துறைக்கு முன்னோடியாக விளங்கியது. திரு நாயர் கேரளத்தை சேர்ந்தவராவார். இந்த இருவரின் எண்ண  ஓட்டமும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும் இருவரும் இந்து மகாசபை கட்சியை ஆதரித்து வந்தனர். அவர்களின் அரசாங்க பதவியினால், இருவராலும்  வெளிப்படையாக ஆதரித்து செயல்பட முடியவில்லை.  
அவர்கள் இருவரும் தங்களை அயோத்திக்கு மாற்றுமாறு, தங்கள் மேலிடத்திற்கு விண்ணப்பம் வைத்தனர். 1948 ஆம் ஆண்டு திரு சிங், நகர சட்ட நடுவராக அங்கே பொறுபேற்றார். அதே வேளையில், திரு நாயரும் மாவட்ட சட்ட நடுவராக பொறுபேற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும் இப்பொழுது உயிருடன் இல்லை.  திரு நாயரின் மகனிடம் மேற்கொண்டு தகவல்களை பெற முயன்றபோது, அவர் பேட்டி எதுவும் தர மறுத்துவிட்டார்.
திரு சிங், திரு நாயர், திரு அபிராம தாஸ் மற்றும் பிற அதிகாரிகள் இரவு நேரத்தில் திரு சிங்கின் இல்லத்தில் கூடி ராமர் சிலையை எவ்வாறு மசூதியினுள் பிரதிஷ்டை செய்வது என்பது பற்றி ரகசியமாக விவாதித்தனர்.  அப்போது தனக்கு 15 வயது இருக்கும் என்றும், இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் போது, தான் அவர்களுக்கு நீரும், தேனீரும் அளிக்கச் சென்றதாகவும், சில சமயங்களில் கதவருகே நின்று  அவர்கள் என்ன பேசினார்கள் என்று கேட்டதாகவும் திரு சிங்கின் மகன் தெரிவிக்கிறார்.  
திரு குரு பஸ்வந்த¢  சிங்கின் கூற்றுக்களை திரு மகாந்த் சத்யேந்திர தாஸ் உறுதிப்படுத்துகிறார். இவர் திரு அபிராம தாஸின் சீடராக இருந்தவர் இப்பொழுது இவரை அரசாங்கம் தலைமைச் சமயகுருவாக நியமித்துள்ளது. 1958 ஆம் ஆண்டு இவர் திரு அபிராம தாஸிடம் சேர்ந்துள்ளார். அவர் கூறுகையில்:  
மாவட்ட உயர் அதிகாரிகள், திரு கே.கே.நாயர், மற்றும் திரு குரு தத் சிங் உட்பட திரு அபிராம தாஸுடன் கூட்டுச் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, பூட்டிக் காவலில் இருக்கும் பாபர் மசூதிக்குள் எவ்வாறு ராமர் சிலையை வைப்பது என்பது பற்றி விவாதித்தனர். 
ஒரு இந்துக் காவலாளி மதியம் மற்றும் மாலை வேளைகளில் மசூதியில் காவல் பணியில் இருந்தார்.  ஒரு இஸ்லாமியக் காவலாளி இரவு நேரக் காவல் பணியில் இருந்தார். திரு அபிராம தாஸையும் மற்றும் சில சிறிய சாதுக்கள் கூட்டத்தையும் உள்ளே அனுமதிக்க இந்துக் காவலாளி ஒப்புக் கொண்டார். இந்து மதத்திற்கு ஒரு மிகப் பெரிய புண்ணிய செயல் செய்து பயன் பெறுவாய் என்று கூறி அவர் மனதைக் கரைத்தனர்.  இந்துக் காவலாளி பின்னர் நடு இரவில் இஸ்லாமியக் காவலாளியிடம் மசூதியின் சாவிகளை ஒப்படைத்துச் சென்றுவிடுவதாக திட்டம் ஏற்பாடானது. மறுபக்கம் இஸ்லாமியக் காவலாளியை திரு குரு தத் சிங்கும், கே.கே.நாயரும் சந்தித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினர். அவர் சம்மதிக்க மறுத்தால், உயிருக்கே ஆபத்து நேரக் கூடும் என்று மிரட்டப்பட்டதாக தெரிகிறது.  அந்தக் காவலாளிகளும் அவருடைய வழித் தோன்றல்களும் பற்றி பின்னர் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.  
ராமரின் சிலை ஏழு அங்குல உயரமும் எட்டு உலோகங்களாலும், உருவம் குழந்தை பருவ நிலையிலும் உருவாக்க தீர்மானிக்கப் பட்டது.  சம்பவம் நடந்த பிறகு, திரு நேருவும் அவருடைய அரசாங்கமும்  கோபப்பட்டு என்ன நடவடிக்கை எடுப்பார்கள்  என்று திரு சிங்கும், நாயரும்  நன்கு உணர்ந்திருந்தனர்.  சிலையை அப்புறப்படுத்த வரும் உத்தரவை ஏற்பதைக் காட்டிலும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதே மேல் என்றும் தீர்மானித்திருந்தனர்.  
நவம¢பர¢ 1949 ஆம் ஆண்டு இறுதியில், அயோத்தியில் பதட்டம் அதிகமாக நிலவியது.  சாதுக்களும் ராம பக்தர்களும் மசூதிக்கு வெளியே நெருப்பு மூட்டி யாகத்தை நடத்தினர். ராமரை அவர் பிறந்த இடத்தில் திருப்பிக் கொண்டுவருவது பற்றியும் சொற்பொழிவு நடத்தினர். இதில் அங்கிருந்த இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று தேதி குறிக்கப்பட்டது.  அன்று இரவு இஸ்லாமியக் காவலாளி காவல் பொறுப்பு ஏற்க வந்த போது, இந்துக் காவலாளி அவரிடம் சாவிக் கொத்தை கொடுத்துவிட்டு சென்றார். அதிகாலை மூன்று மணி அளவில் (இந்து மதத்திற்கு அது அனுகூலமான உகந்த நேரமாக கருதப்பட்டது) அபிராம தாஸும் அவருடன் வந்த சாதுக்களும் சிறிய மணிகளை ஆட்டியபடி தங்கள் பணியைத் துவக்கினர். விளக்கேற்றிய பிறகு, அந்த சிறிய சிலை மைய மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டு, "இரக்கம் நிறைந்த பரந்த மனப்பான்மையுடைய கடவுள் தோன்றினார்"! என்று பாடினார்கள்.  
அந்த இஸ்லாமியக் காவலாளி உள்ளூர் அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை மூன்று மணி அளவில் மசூதியின் மைய மண்டபப் பகுதியில் பெரிய ஒளி தோன்றியதாகவும், அங்கு சென்று பார்த்த பொழுது அங்கு சிறிய ராமர் சிலை தானாக உதயமாகி ஒளி  வீசிக் கொண்டிருந்ததாகவும்  தெரிவித்துள்ளார். 
சம்பவம் நடந்த பிறகு, பதட்டத்தை தணிக்க போலீசார் அங்கு வரவைக்கப்பட்டனர்.  சாதுக்கள் கூட்டத்தை கலைக்க,  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில சாதுக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. திரு சிங்கின் மகன் தன் தந்தையாரும் மற்றவர்களும் தீட்டிய திட்டப்படி போலீஸாருக்கு வானில் சுடும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறார். 
இரண்டு தகவல் தொடர்பாளர்கள் அயோத்திக்கும் பைசாபாதிற்கும் இடையே மிதிவண்டியில் சென்று செய்தி சேகரித்து திரு குரு தத் சிங்கிடம் தெரிவித்தனர்.  அவர் பிரத்யேகமாக நியமித்த ஒரு இந்துப் பணியாளரிடம் தன் கைப்பட எழுதிய தகவல்களை கொடுத்து திரு நாயரிடம் சென்று சேர்க்குமாறு பணித்திருந்தார்.  இவ்வாறு இருவரும் தகவல் பரிமாற்றத்தை பெற்றனர் என்று கூறுகிறார் திரு குரு பஸ்வந்த சிங். மேலும் அவர்,  திரு சிங், தனது இல்லத்தில் வழிபாட்டையும், பூஜையையும் நடத்தி முடித்தார் என்றும், "அவர்  என்ன வேண்டினார் என்று தெரியவில்லை, ஆனால் என் அனுமானப்படி அவர், "எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும்" என்று கூறியிருப்பார் என்று நம்புகிறேன்"  என்கிறார்.  
பிறகு திரு சிங், அயோத்தியில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் காவல் துறையினருக்கு அவர் "இந்துக்களை தடுக்க வேண்டாம்" என்று மறைமுகமாக உத்தரவிட்டார்.  அவர் தனது பாயிசாபாத் இல்லத்தை விட்டு, அதிகாரிகள் தங்கும் அரசினர் விடுதிக்கு சென்றார். தன்னைப் பற்றி யார் விசாரித்தாலும் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். 
அருகில் இருக்கும் ஊர்களுக்கு செய்தி காட்டுத்தீ போல பரவியது.  ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் சிலையை தரிசனம் செய்ய அயோத்திக்கு படை எடுத்த வண்ணம் இருந்தனர்.  திரு அக்க்ஷய பிரம்மச்சாரி, வயது 35 - (இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், மற்றும் தீவிர ராம பக்தரும் கூட), "ராம பக்தர்கள் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம், "கடவுளை தரிசிக்க வாருங்கள் " என்று எல்லா இடங்களுக்கும் கூவியபடி சென்றனர். உள்ளூர் அதிகாரிகளோ, திரு நாயரோ, ஒருவர் கூட சிலையை அகற்ற அல்லது பதட்டத்தை தணிக்க ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. 

Thursday, December 13, 2012

டி. என். ஏ. Karpom Ariviyal



My Sincere Thanks to http://ta.wikipedia.org/s/m6


டி. என். ஏ.

DNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிரி
டி.என்.ஏ என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது.
புரதம், ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால் இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும்.

டி.என்.ஏ கட்டமைப்பு

டி.என்.ஏ யின்வேதிக் கட்டமைப்பு. ஐதரசன் பிணைப்புக்கள் புள்ளிக் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது.
டி.என்.ஏ யின் ஒரு பகுதியைக் காட்டும் இயங்குபடம். சுருளாகச் செல்லும் இரு இழைகளுக்கு கிடையாக bases அமைந்துள்ளன.
இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. டி.என்.ஏ யானது நியூகிளியோடைட்டுக்கள் என அழைக்கப்படும் எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல்பகுதியக் கட்டமைப்பாகும். இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் ஜேம்ஸ் டி. வற்சன் (James D. Watson), ஃப்ரான்சிஸ் கிரிக் (Francis Crick) ஆகிய இருவருமாவர். ஒரு பொது அச்சைச் வட்டமாகச் சுற்றிச் செல்லும் இரு சுருளிச் சங்கிலி வடிவங்கள், 10 அங்க்ஸ்ரோம் (1.0 நானோ மீற்றர் nm) ஆரையையும், 34 அங்க்ஸ்ரோம் (3.4 nm) புரியிடைத் தூரத்தையும் கொண்டிருக்கும் அமைப்பொன்றை இவர்கள் கண்டு பிடித்தனர்.

உயிரினங்களில் டி.என்.ஏ யானது பொதுவாக தனியான மூலக்கூறாக இல்லாமல், இரு மூலக்கூறுகள் இறுக்கமாக இணைந்த நிலையில் காணப்படும். இரு இழைகளும், ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதனால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்கள் (nucleotide) எசுத்தர் பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒற்றைச்சர்க்கரைகளையும், அவற்றுடன் இணைந்த தாங்கி (base) மூலக்கூறுகளையும், பொசுபேற் (Phosphate) கூட்டங்களையும் கொண்டிருக்கும். ஒற்றைச்சக்கரை மூலக்கூறுகள் ஒவ்வொன்றுடனும், அடினின் (Adenine - A), தயமின் (Thymine -T), சைற்றோசின் (Cytosine - C), குவானின் (Guanine - G) என்ற நான்கு தாங்கிகள் (bases) என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் ஏதாவது ஒன்று பிணைந்திருக்கும். ஒற்றைச்சக்கரை ஒன்றுடன் ஒரு தாங்கி மூலக்கூறு இணைந்து வரும் தொகுதி நியூக்கிளியோசைட்டு (nucleoside) எனப்படும். பின்னர் அது பொசுபேற்றுடன் இணையும்போது நியூக்கிளியோடைட்டு எனப்படுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்களில் காணப்படும் இந்த தாங்கி மூலக்கூறுகளின் ஒழுங்கு வரிசையே அனைத்து மரபியல்சார் தகவல்களையும் கொண்டிருக்கும் மரபுக் குறியீடுகளை நிர்ணயிக்கும். இந்த மரபுக் குறியீடுகள் புரதங்களின் எளிய கூறுகளான அமினோ அமிலங்களுக்கான வரிசையை தீர்மானிக்கும். இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும். (ஆர்.என்.ஏ யில் தயமினுக்குப் பதிலாக யூராசில் (uracil) எனப்படும் தாங்கி காணப்படும்)

டி.என்.ஏ யின் ஆதார இழையில் ஒற்றைச்சக்கரைகளும், பொசுபேற்றுக்களும் ஒன்றுவிட்டு ஒன்றான ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை, ஐந்து கரிம அலகுகளைக் கொண்ட 2-deoxyribose ஆகும் (ஆர்.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை ribose ஆகும்). அருகருகாக உள்ள இரு ஒற்றைச்சக்கரை வளைய மூலக்கூறுகளில் 3 ஆம், 5 ஆம் இடங்களிலுள்ள கரிமங்களுடன் ஒரு பொசுபேற் மூலக்கூறானது பொசுபேற்-இரு-எசுத்தர் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியான சமச்சீரற்ற பிணைப்புக்களால், ஒவ்வொரு இழையும் ஒரு திசையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ யில் ஒரு இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசைக்கு எதிர்த் திசையிலேயே அடுத்த இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசை அமையும். இதனால் இரு இழைகளும், ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருப்பதைக் காணலாம். இழைகளின் நுனிகளும் சமச்சீரற்ற நிலையிலேயே காணப்படும். ஒரு இழையின் ஒரு நுனியில், ஒற்றைச்சக்கரையின் 5 ஆம் கரிமத்துடன் இணைந்த பொசுபேற் அலகு காணப்படும். இதனை 5' (5 prime) என்பர். அதே பக்கமுள்ள அடுத்த இழையின் நுனியில் ஒற்றைச்சக்கரையின் 3 ஆம் கரிமத்தில் இணைந்த OH கூட்டம் (hydroxyl group) காணப்படும். இதனை 3' (3 prime) என்பர்.

டி.என்.ஏ யிலுள்ள புரியிடைத் தூரம் மிகச் சிறியதாக இருப்பினும், இது மில்லியன் எண்ணிக்கையிலான நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்ட பல்பகுதியமாகும். மனிதனில் உள்ள நிறப்புரிகளில் முதலாவது நிறப்புரி கிட்டத்தட்ட 220 மில்லியன் இணைதாங்கிகளைக் (base pairs) கொண்டது. டி.என்.ஏ இழைகளின் பகுதிகள் குறிப்பிட்ட வெவ்வேறு புரதங்களிற்கான தகவல்களை அல்லது கட்டளைகளைக் கொண்ட மரபணுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 நிறப்புரிகள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவில் இருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என்.ஏ இன் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது. டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்..

டி.என்.ஏ யின் அமைவிடங்கள்

மெய்கருவுயிரிகள்

விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், அதிநுண்ணுயிரிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளில் அதிகளவான டி.என்.ஏ க்கள் உயிரணுக் கருவிலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் இழைமணிகள், பச்சையவுருமணிகள் போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான நுண் உறுப்புக்களிலும் அமைந்திருக்கும். உயிரணுக்களில் நீளமான அமைப்பான நிறப்புரிகளில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் ஹிஸ்டோன் எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து நியூக்கிளியோசோம்களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சுருளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, குரோமற்றின் (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், டி.என்.ஏ இரட்டிப்பு எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும்.
Fig. 2: The major structures in DNA compaction; DNA, the nucleosome, the 10nm "beads-on-a-string" fibre, the 30nm fibre and the metaphase chromosome.

நிலைக்கருவிலிகள்

ஆனால் பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நிலைக்கருவிலிகளில், டி.என்.ஏ யானது குழியமுதலுருவில் (cytoplasm) காணப்படும்.

டி.என்.ஏ யின் இயல்புகள்

பள்ளங்கள் (Grooves)

டி.என்.ஏ யின் இரட்டைச்சுருள் வடிவம்
இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும். சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும். இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும். உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும்.

இணைதாங்கிகள் (Base pairs)

GC DNA base pair.svg
AT DNA base pair.svg
மேலே: மூன்று ஐதரசன் பிணைப்புடன் உள்ள GC இணைதாங்கி, கீழே: இரண்டு ஐதரசன் பிணைப்புடன் உள்ள AT இணைதாங்கி
இரு இழைகளிலுமுள்ள தாங்கி மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களால், இரு இழைகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இழையிலுள்ள குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறானது, அடுத்த இழையிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறுடன் மட்டுமே இணையும். அடினினானது அடுத்த இழையிலுள்ள தயமினுடனும், ஒரு இழையிலுள்ள சைற்றோசினானது, அடுத்த இழையிலுள்ள குவானினுடனும் மட்டுமே இணையும். இவ்வாறு இணையும் இரு தாங்கிகளையும் சேர்த்து இணைதாங்கி எனலாம். ஐதரசன் பிணைப்பானது பகிர்பிணைப்பு (அல்லது பங்கீட்டுப் பிணைப்பு அல்லது சம பிணைப்பாக = covalent bond) இருப்பதனால், அவை இலகுவில் பிரியவும் மீண்டும் சேரவும் கூடியனவாக இருக்கும். பொறியியல் விசை மூலமோ, அதிக வெப்பம் மூலமோ, இலகுவாக பல்லிணைவுப்படிகை போன்று இரு இழைகளும் பிரிக்கப்படலாம். இதன் மூலம், ஈரிழை டி.என்.ஏ யின் ஒவ்வொரு இழையிலும் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொரு இழையிலும் இந்த இயல்பானது டி.என்.ஏ இரட்டிப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இரட்டிக்கப்பட்டு புதிய நிரப்பு இழைகள் தோன்றும். இவ்வாறாக நிரப்பு இணைதாங்கிகளுக்கிடையே (complementary base pairs) நிகழும் மீள்தகு இடைவினையானது உயிரினங்களில் டி.என்.ஏ யின் தொழில்கள் அனைத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

பியூரீன், பிரிமிடீன் என்ற இரு வகையான தாங்கி மூலக்கூறுகளிலும் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. அடினின், தயமினுக்கு இடையில் இரு ஐதரசன் பிணைப்புக்களும், சைற்றோசின், குவானினுக்கு இடையில் மூன்று ஐதரசன் பிணைப்புக்களும் தோன்றும். மேலதிகமாக உள்ள ஒரு ஐதரசன் பிணைப்பின் விளைவால், GC அளவு அதிகமாகவுள்ள டி.என்.ஏ யானது, GC அளவு குறைவாக உள்ள டி.என்.ஏ யிலும்பார்க்க நிலைத்தன்மை கூடியதாக இருக்கும். GC அளவு அதிகமாக உள்ள, நீண்ட இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் உறுதியான பிணைப்புக்களையும், AT அளவு அதிகமுள்ள, குறுகிய இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் பலவீனமான பிணைப்புக்களையும் கொண்டிருக்கும்.

பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும்.

மேலான சுருளாக்கம் (Supercoiling)

டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது தளர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது நேர்மறையான மேலான சுருளாக்கம் (positive supercoiling) எனப்படும். சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது எதிர்மறையான மேலான சுருளாக்கம் (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் நொதியத்தின் தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும். டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும்.

மாற்று டி.என்.ஏ வடிவங்கள்

இடமிருந்து வலமாக டி.என்.ஏ யின் A, B, Z வடிவங்கள்
தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உலோக அயனிகளின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும்.

சந்திரயான்-1 Karpom Ariviyal.

 
My Sincere Thanks to  

http://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-1
 
 
சந்திரயான்-1
 
சந்திரயான்-1
ஒப்பந்தக்காரர் இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட வகை செயற்கைக்கோள்
Satellite of சந்திரன்
ஏவப்பட்ட நாள் அக்டோபர் 22, 2008 - ஸ்ரீஹரிக்கோட்டா, இந்தியாவின் கொடி இந்தியா
ஏவுகலம் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனம் பி.எஸ்.எல்.வி-சி11
திட்டக் காலம் 2 ஆண்டுகள்
தே.வி.அ.த.மை எண் CHANDRYN1
இணைய பக்கம் Chandrayaan-1
நிறை 523 கிகி (1,153 இறா)
திறன் சூரிய (750 W)
Orbital elements
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் அண்ணளவாக வட்டப்பாதையில்
சேய்மைநிலை ஆரம்பத்தில் 1,000 கிமீ (621 மை)
சந்திரயான்-1  என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும். பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும்.
இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார். இத்திட்டத்திற்கு இந்திய ரூபாயில் 3.8 பில்லியன் (சுமார் 83 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

திட்ட இலக்குகள்

சந்திரயான்-1
  • தொலையுணர்வுக் கருவிகளைப் பயன்படுத்தி நிலவின் முழுப்பரப்பிலும் விரவியுள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் கதிரியக்க அணுக்கருத் தனிமங்கள் உள்ளிட்ட வேதிமூலகங்களின் பரவலையும், இட விவரங்களையும் முப்பரிமாணத்தில் அதிக துல்லியத்துடன் வரைபடமாக்கல். இதன் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் சூரியக் குடும்பத்தின், குறிப்பாக நிலவின், தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரியாத பல புதிர்களுக்கு விடையளிப்பனவாக இருக்கும்.
  • அறிவியல் ஆய்வுக் கருவிகள், நிலவுக் கலம், ஏவுவாகனம், டி.எஸ்.என் நிலையம் உள்ளிட்ட தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல் மற்றும் சோதித்தல்,ஏவுதல் மற்றும் ~100கி.மீ நிலவுச் சுற்றுப்பாதையை எய்துதல், சுற்றுப்பாதை ஆய்வுகள், தொலைத்தகவல் பரிமாற்றம், தெரிந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளின் உடனடிப் பயன்பாட்டிற்கான தகவல் சேகரிப்பு மற்றும் தொகுப்பு ஆகியவற்றில் நிர்ணயித்த இலக்குகளை எட்டுதல்.

குறிப்பான ஆய்வுத் துறைகள்

  • நிரந்தரமான மறைவுப் பகுதிகளான வட மற்றும் தென் துருவப் பகுதிகளை அதிக துல்லியத்துடன் கூடிய கனிமவியல் மற்றும் வேதியியல் படமாக்கல்.
  • நிலவில், குறிப்பாக துருவப் பகுதிகளில் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு அடியில் நீர் அல்லது உறைபனி உண்டா எனத் தேடுதல்.
  • நிலவின் உயர் நிலப் பாறைகளின் இறுதிஉறுப்பு தாதுப்பொருட்களை அடையாளம் காணுதல்.
  • நிலவுப் பெருங்குழியின் மத்திய மேட்டுப் பகுதியினைத் தொலையுணர்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நிலவின் புற ஓட்டினை வேதி நில அடுக்கு வரைவு செய்தல்.
  • செயற்கைக்கோள் பாதை நெடுக, நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உயர வேறுபாடுகளை வரைபடமாக்கல்.
  • நிலவின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரிதலில் புத்தொளி பெற வேண்டி, 10 கிலோ எலெக்ட்ரான் வோல்ட்டுக்கும் அதிகமான எக்ஸ்-கதிர் நிறமாலையை உற்றறிதல் மற்றும் 5 மீ துல்லியத்துடன் நிலவுப் பரப்பின் பெரும்பகுதியை உருவமொத்த வகையில் பதிவாக்கல்.

ஆய்வுக் கருவிகள்

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கருவிகள் ஆறும், ஆறு அந்நியக் கருவிகளுமாக 55 கிகி மொத்த நிறையுடைய ஆய்வுக்கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.
  • நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி: 5 மீ துல்லியமும் அனைத்துநிறப் பட்டையில் 40 கி.மீ வீச்சும் கொண்ட நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி (The Terrain Mapping Camera (TMC)).
  • மீ நிறமாலை படிமமாக்கி: 400 - 900 நேனோமீட்டர் பட்டையில் 15 நேனோமீட்டர் நிறமாலைப் பிரித்துணர்வுடனும், 80 மீ இடப் பிரித்துணர்வுடனும் கனிமவியல் வரைபடமாக்கல் புரியும் மீ நிறமாலை படிமமாக்கி (Hyper Spectral Imager (HySI).
  • லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி: மேற்பரப்பு இடவிவரங்களைத் தீர்மானிக்கும் லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி (Lunar Laser Ranging Instrument (LLRI)).
  • எக்ஸ்-கதிர் ஒளிர்வு நிறமாலைமானி: (X-ray Fluoresence Spectrometer).இது பின்வரும் மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்கும்:
  • குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி: 10 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 0.5 - 10 கி.எ.வோ அளவீடுகளுக்கான குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி (Low Energy X-ray Spectrometer (LEX)).இது Si, Al, Mg, Ca, Fe மற்றும் Ti ஆகியவற்றின் பரவலை வரைவு செய்யும்.
  • உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி: 20 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 10 - 200 கி.எ.வோ அளவீடுகளுக்கான உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி (High Energy X-ray / Gamma ray Spectrometer (HEX)).இது U, Th, 210Pb, 222Rn உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களை அளவிடும்.
  • சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி: 2 - 10 கி.எ.வோ அளவிலான சூரியப் பாயத்தைக் கண்டறியும் சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி (Solar Flux Monitor (SXM)).இது சூரியப் பாயத்தைக் கண்காணித்து LEX மற்றும் HEX-இன் முடிவுகளை நெறிப்படுத்தும்.
  • நிலவு மோதல் சலாகை (Moon Impact Probe (MIP) ஒன்று.இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

நிலவில் நீர் கண்டுபிடிப்பு

(இடது) நிலவின் புவி-பாரா பக்கத்திலுள்ள இளங்கட்ட நிலவுப்பள்ளம் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது; (அருகில்) அதே நிலவுப்பள்ளம் நாசா வின் எம் 3 யின் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. Credits: ISRO/NASA/JPLCaltech/USGS/Brown Univ.
சந்திராயன்-1 இல் ஏற்றப்பட்டிருந்த (அமெரிக்க) நாட்டு வானியல்-விண்வெளியியல் நிறுவனம் நாசாவின் எம் 3 எனப்படும் நிலவுக் கனிமவியல் வரைவி (Moon Mineralogy Mapper), நிலவு மோதல் ஆய்வி யின் மோதலை ஆய்வு செய்தது; இந்த ஆய்வின் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஓர் சுவையான கண்டுபிடிப்பு, அவ்வளவே -- நருலிகர்

பதும விபூசன் விருதாளரும் நன்கறியப்பட்ட இந்திய அண்டவியலாளருமான சயந்து நருலிகர் கூறுகையில், நிலவில் நீர் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு ஒரு முக்கிய திருப்புமுனை அல்ல என்றும் பொதுசன மனிதனும் இதில் ஆர்வத்துடன் இருப்பதால் இது ஓரு சுவையான கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Monday, December 10, 2012

அந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானவை!!! - MAN Vs WILD




My Sincere Thanks to http://www.muthusiva.in/2012/12/man-vs-wild.html


அந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானவை!!! - MAN Vs WILD

நம்ம இம்சை அரசன்ல வர்ற அக்காமாலா, கப்ஸி தயாரிக்கிற காட்சி ஞாபகம் இருக்கா? "அரைத்த புயங்கொட்டையை வெண்ணீரில் கலந்து கொதிக்க விட வேண்டும்.. பின்பு அதனுள்  ஒரு கைப்பிடியளவு மண்புழுக்களை அள்ளி போடவேண்டும்" னு சொன்னவுடனே ஒரு வேலையாள் வாந்தி எடுப்பன். "பின்பு அதனுள் ஒரு முயலை மூன்று நாட்கள் நீந்த விட வேண்டும். பிறகு பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்றாக வடிகட்ட வேண்டும்"னு ன்னு சொன்னதும் "நானெல்லாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்தவனைய்யா"ன்னு சொன்ன வடிவேலுகூட வாந்தி எடுத்துருவாரு. அதே மாதிரிதான் இங்கயும்.இவிங்க பண்றத பாத்தா யாரா இருந்தாலும் உவ்வே தான்.

மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன் வர்றான் பாருங்க.

இந்த ப்ரோக்ராம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால அமேசான் காட்டுல 3500 வகை பூச்சிங்க இருந்துச்சாம். ஆனா இப்ப வெறும் 350 வகைதான் இருக்காம். மத்ததுங்க எல்லாம் என்ன  ஆச்சா? இவன் எல்லாத்தையும் புடிச்சி திண்ணுட்டாங்க. வழில போயிகிட்டேஇருக்கான்... ஒரு தவளை அதுபாட்டுக்கு சிவனேன்னு ஒரு மரத்துல உக்காந்துருக்கு ... உடனே அத புடிச்சி "ஐ... இத கொஞ்ச நேரம் மென்னுகிட்டே நடக்கலாம்.. இது ரொம்ப சுவையா இருக்கும்" அப்புடின்னு உடனே வாய்க்குள்ள தூக்கி போட்டு மெல்ல ஆரம்பிச்சிடுறாய்ங்க.அவன கொஞ்ச நாளு அமேசான் காடுங்களுக்குள்ள தொடந்து நடமாட விட்டா அங்க உள்ள மிச்சம் இருக்குற பூச்சி இனங்களையெல்லாம் அடியோட திண்ணே அழிச்சிருவான்.



அன்னிக்கு நா பாத்த ஒரு எபிசோடு

நம்மாளு வழக்கம் போல "இந்த காடுகள்ல மிகவும் கவனமா இருக்கனும்... இந்த காட்டுல கொடிய விஷமுள்ள பாம்புங்க நிறைய இருக்கு... அதுங்க மனுஷங்கள அப்புடியே விழுங்கிரும். அப்டின்னு சொல்லிகிட்டே பொயிட்டுருந்தான். திடீர்னு ஒரு மரத்த பாத்து 'இந்த மரப்பட்டைங்கள கொஞ்சம் சாப்டா பாம்பு கடிச்சா விஷம் ஏறுரத தடுக்கும் ன்னு கொஞ்சம் மரப்பட்டைங்கள  வெட்டி பையில போட்டுகிட்டான்... அவ்வளவு பயந்தவனாடா நீயி...

 கொஞ்ச தூரம் போயிட்டே இருந்துட்டு திடீர்னு "பாருங்க... பாருங்க இங்க பாருங்க" ன்னு கத்துனான். உண்மையிலயே ஒரு ஆறடி நீள பாம்பு ஆந்த்ரா மெஸ் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டா மாதிரி உப்பலான வயிரோட அந்த இடத்த விட்டு நகராம படுத்துருந்துச்சி.. சரி இவந்தான் பாம்ப கண்டா பயப்புடுவானே ஓடிருவான்னு பாத்தா மெதுவா அந்த பாம்புக்கு பின்னாடி போய் அது கழுத்த புடிச்சி தூக்கிட்டான்...

ஏன் இந்த குருட்டு நாயி ஓடாம இப்புடி பண்றான்னு பாத்தா... பையிலருந்து ஒரு கத்திய எடுத்து அந்த பாம்பு தலைய தனியா வெட்டி போட்டுட்டு அடுத்த அஞ்சி நிமிஷத்துல அந்த பாம்போட கொடல தனியா உருவி வெளிய எடுத்துட்டு "பாம்போட வெய்ட்டுல மூணுல ரெண்டு பகுதி அதோட குடல் தான்... அதுனால குடல தனியா எடுத்துட்டா இத தூக்கிட்டு போக மிக ஈசியா இருக்கும்" அப்புடின்னு சொல்லிட்ட்டு அந்த பாம்ப அப்புடியே தோள்ல போட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான். ஏண்டா டேய் பாம்புககிட்டருந்து நீ தப்பிக்க மரத்து வேரெல்லாம் எடுத்து வச்சிருக்க உன்கிட்டருந்து தப்பிக்க அதுங்க எதடா எடுத்து வச்சிருக்கனும்? கொஞ்ச நேரத்துல அத நெருப்புல போட்டு சுட்டு "ஹ்ம்ம்ம்.... இன்னிக்கு நைட் டின்னர் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு... " ன்னு சாப்புட்டுகிட்டு இருக்குறான். 



அப்புறம் போயிட்டே இருந்தான்.. ஒரு பட்டுப்போன மரம் இருந்துச்சி.... அத ரெண்டா கையால ஒடைச்சிட்டு உள்ள பாத்தான்... பாத்துட்டு ஒரு ரியாக்சன் குடுத்தான் பாருங்க.. "ஹையோ நா இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல... நா ரொம்ப அதிர்ஷ்டக்காரன்" என்னடா இது இந்த நாய்க்கு மரத்துக்குள்ளருந்து பொதையல் எதுவும் கெடைச்சிருச்சோன்னு பாத்தா, உள்ள வெள்ளைக்கலர்ல சின்ன சின்ன புழுவா இருக்கு.

உடனே அதுல ரெண்ட கையில புடிச்சி "இந்த புழுக்கல்ல புரத சத்து மிகவும் அதிக அளவுல காணப்படுது.. அதுனால இதுங்கள கொஞ்சம் திண்ணா எனக்கு அதிக அளவுள சக்தி கிடைச்சி நா ரொம்ப தூரம் நடக்கலாம்" ன்னு சொல்லிட்டு அத வாயில போட்டு கருமுருன்னு மெண்ணு திண்ணுட்டான்... (உங்களூக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்குள்ள... எனக்கும் அதே ஃபீலிங் தான்) அதோட  மட்டும் இல்லாம "இந்த புழுக்கல நா கொஞ்சம் சேகரிச்சி வச்சிக்குறேன்... வழில நொறுக்கு தீனிமாதிரி இத உபயோகிச்சிகிட்டா நல்லா இருக்கும்"ன்னு சொல்லி ஒரு சின்ன சுருக்குபைபுல  மிச்சம் இருக்கதையும் அள்ளி போட்டுகிட்டு கெளம்பிட்டான். என்ன வாயிடா அது என்ன வாயி?

அப்புறம் இதெல்லாம் முடிச்சிட்டு ஒரு குகைக்கு போணான்... " இங்க உள்ள போயி பாத்தா என்னோட நைட் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்கும்முனு நினைக்கிறேன்"னு உள்ள போயி தீ பந்தந்த வச்சிகிட்டு தேடுனான்... ஒரு ப்ரம்மாண்டமான பெருச்சாளி... "இது மட்டும் புடிச்சிட்டா எனக்கு இன்னும் ரெண்டு வேளைக்கு சாப்பாட்டு ப்ரச்சனையே இல்ல" அப்புடின்னு சொல்லிகிட்டெ அத தொறத்த அது டக்குன்னு ஒரு பொந்துக்குள்ள ஓடிருச்சி..
அதுக்கு ஆயுசு கெட்டி போல..  அப்புறம் அந்த குகையையே சுத்தி பாத்த அவன்
"இங்க பாருங்களேன்... என்னால இத நம்பவே முடியலன்னு" ஒரு ஜெர்க்க குடுத்தான்.. அய்யய்ய திரும்ப எதோ புழுங்கள பாத்துட்டான் போலருக்குடான்னு நெனச்சா இந்த தடவ  புழு இல்ல... பூச்சி.. சிலந்தி பூச்சி... ஒரு பெரிய சிலந்தி பூச்சி ஒண்ணு வலையில நின்னுச்சி..

"இங்க பாருங்களேன்.. இவ்வளவு பெரிய சிலந்தி பூச்சிய நா பாத்ததே இல்லை... நா தேள் சாப்புட்ட்டுருக்கேன்.. நட்டுவாக்கிளி சாப்டுருக்கேன்... ஆனா இவ்வளவு பெரிய சிலந்திய சாப்டதே இல்லை.. அதோட உடம்ப பாருங்களேன்... தேள் மாதிரியே இருக்கு  இது எதோ hybrid வகைய சேந்ததுன்னு நெனைக்கிறேன்" (ஏன்டா இல்லைன்னா மட்டும்
அத திங்காமயா விடப்போற... திண்ணு தொலை) அந்த சிலந்தி பூச்சிய கையில எடுத்து  மிஸ்டர் பீன் இரால சாப்புடுற மாதிரியே அந்த பூச்சிய கடிச்சிட்டு ஒண்ணு சொன்னான் பாருங்க... "நா அந்த சிலந்தியோட பின் பகுதிய கடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன்". ஏண்டா 6 அடி நீள பாம்பையா தூக்கிப்போட்டு தூர் வாருற.. இதுல சிலந்திய நீ முன்னால கடிச்ச என்ன பின்னால கடிச்சா என்ன?


இந்தாளுக்கு காட்டுல இருக்கதுங்கள எப்புயெல்லாம் கொல்லலாம்னுதான் ஸ்பெசல் ட்ரெயினிங் குடுத்துருப்பாய்ங்க போல. ஒரு நாள் போயிட்டே இருந்தான். திடீர்னு நின்னான்... "இங்க எங்கயோ கோழிங்க கத்துற சத்தம் கேக்குது.  அதுனால நா இங்கயே கொஞ்ச நேரம் தங்கி இருந்து அதுங்கள வேட்டையாட போறேன்னு படக்குன்னு நாலு குச்சிங்கள வெட்டுனான், ரெண்டுமூனு கெளைங்கள அப்புடியே ஒடிச்சான் ஒரு ஒருமணி நேரத்துல
கடையவே போட்டுட்டான். கிட்டத்தட்ட ஒரு ஆளு தூங்குற மாதிரி ஒரு சின்ன வீட்டையே கட்டிபுட்டான்.  "சரி இப்ப வேட்டையாடனும்... ஆனா அதுக்கு எனக்கு இப்போ அம்புங்க வேணும்" நேரான ஒரு குச்சியை ஒடைச்சான்..

அங்கன்னு பாத்து எவனோ பல வருசத்த்துக்கு முன்னாடி குடிச்சிட்டு போட்ட ஒரு பாதி  பீர் பாட்டில் கெடக்கு. அதோட அடிப்பகுதியே அப்புடியே கொஞ்ச கொஞ்சமா ஒடச்சி கூரா ஆக்கி அந்த குச்சிக்கு மொனையில வச்சி கட்டிட்டான்... அம்பு ரெடி... அடப்பாவி பல வித்தைகள கையில வச்சிருக்கான்யா. சும்மாவே ஜங்கு ஜங்குன்னு ஆடுவான்... இதுல சலங்கைய வேற கட்டியாச்சின்னா குஷிதான்... வெறும் கையையும் வாயையும் வச்சே பல ப்ராணிகளை கடிச்சி திண்ணவனுக்கு அம்பு கெடைச்தும் சும்மா இருப்பானா.. பத்தே நிமிசம் தான்.. 3 அடிக்கு ஒரு வான் கோழிமாதிரி எதையோ தூக்கிட்டு வந்துட்டான். அப்புறம் என்ன உக்காந்து மேய வேண்டியதுதான். நெருப்ப கொழுத்தி போட்டு, பாதி கோழிய சுட்டு திண்ணுட்டு பாதிய எடுத்து பைக்குள்ள வச்சிகிட்டான்.

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு  விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி  வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு  விதி முடிஞ்சி போச்சின்னு  அர்த்தம்டா!!

Sunday, December 9, 2012

பறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் ?????

 

 

My Sincere Thanks to    http://maravalam.blogspot.in/2012_07_01_archive.html

 

பறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் ?????


டோடோ பறவை
 தாவரங்களுக்கும், பறவைகள்+மிருகங்களுக்கும் உள்ள உறவு ஒன்றுக்கொன்று சார்ந்தது. பறவைகள் மற்றும் மிருகங்களின் உணவுப் பாதையில் சென்று வரும் விதைகளுக்கு முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். தாவரங்கள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பதால் நன்றிக் கடனாக அவைகளின் வித்துக்களை எளிதாக முளைக்கச் செய்து காடெங்கும் பரவச் செய்யும். இந்த நிலையில் மனிதன் இவற்றிக்கிடையே நுழையும் போது இரண்டிற்கும் அழிவு சர்வ நிச்சயமாகிறது.

கல்வாரியா மரம்
1970 களில் மொரீஷிஸ் தீவின் கணக்கெடுப்பு ஒன்றில்  வெறும் 13 கல்வாரியா மரங்களே இருந்தன. அவைகள் அனைத்தும் 300 வருட மரங்களாக இருந்தன. தீவிர ஆராய்ச்சியில் அந்த தீவில் வாழ்ந்த டோடோ பறவையின் அழிவிற்கும் இந்த மரத்திற்கும் இருந்த தொடர்பு தெரிய வந்தது. 1500 ஆம் ஆண்டுகளில் மொரீஷிஸ் தீவில் கால்பதித்த ஐரோப்பிய கடலோடிகள் அதிக எடையுள்ள பறக்க முடியாத இந்த பறவையைப் பார்த்தவுடன் அடித்து உண்ண ஆரம்பித்தனர். அவர்களுடன் வந்த பிராணிகளும் அதன் முட்டைகளை ருசி பார்த்தன.   விளைவு மனிதன் கால் பதித்த 100 ஆண்டுகளில் டோடோ பறவை இனம் இந்த உலகை விட்டு மறைந்தது. 1681 ஆண்டு கடைசி டோடோ பறவை தன் உயிரை விட்டது

கல்வாரியா மர விதை
  அதற்கு பின்பு இம்மரங்களின் விதைகளுக்கு முளைப்புத் திறனின்றிப் போனது. காரணம் கல்வாரியா மரவிதைகளை டோடோ பறவைகள் உணவாகக் கொண்டது. அதன் உணவுப் பாதையில் வெளி வந்த விதைகளே முளைப்புத் திறன் பெற்றிருந்தது. தற்சமயம் வான்கோழியின் உதவியுடன் விதைகளை முளைக்க செய்ய முயற்சிகள் நடை பெறுகின்றன. நமது சந்தன மர விதைகளுக்கு இந்த உறவு பொருந்தும். இதுபோன்று எவ்வளவு ஜீவராசிகளை அழித்திருக்கிறோமோ??? கண்ணுக்கு தெரிந்த உயிரினங்கள் சரி!! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள்??? இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அப்போது அவைகள் அழிந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது தெரியும்.

அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்

 

My Sincere Thanks to  http://maravalam.blogspot.in/2012_09_01_archive.html

அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்


அசோகமரமும் நெட்டி லிங்கமும்


பெயர்                  : அசோகமரம்
தாவரவியல் பெயர்     :   Saraca asoca
ஆங்கிலப் பெயர்       : Asoka Tree
தற்போதைய நிலை  : அழிவின் விளிம்பு                                                                                IUCN   Status : Vulnerable (IUCN 2.3) 
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும் சந்ததிகளுக்கு  அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு இன்று நெட்டிலிங்கத்தை  அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.                        
அசோகமர விதைகள்
அசோகமர பூக்கள்
 பெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன
அசோகமர காய்கள்
அசோகமரம்


இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம் சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும் கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்
அசோக மர நாற்றுக்கள்

கரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி http://maravalam.blogspot.in/2012/12/blog-post.html

 

 My Sincere Thanks to http://maravalam.blogspot.in/2012/12/blog-post.html

கரும்பு இனப்பெருக்கு நிலையம் நடத்தும் நூற்றாண்டு விழா புகைப்படப் போட்டி

 
  இவ்வருடம் நூற்றாண்டு காணும் கோவை கரும்பு இனப்பெருக்கு நிலையம் ,  அகில இந்திய அளவிலான புகைப்படப் போட்டியினை நடத்த உள்ளது  .  இந்தியாவில் வாழும் 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் . அனுமதி இலவசம்.       'கரும்பு' என்னும் தலைப்பில் sbiphotocontest@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி   15-12-12 இந்திய நேரம் நண்பகல் 12 மணியாகும்.
          நுழைவுப் படிவம் மற்றும் போட்டி விதிமுறைகளை http://www.sugarcane100.blogspot.in , www.sugarcane.res.in  மற்றும்  www.caneinfo.nic.in என்னும் தளங்களில் காணலாம்
கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!!!!